பாராளுமன்றில் பதற்றம் புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்
அத்துமீறிய இருவரும் வண்ணத்தை உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய இருவரால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.
தடை செய்யப்பட்ட பொருட்களுடன் மக்களவையில் நுழைய முயன்ற இருவரை தடுத்துநிறுத்தி பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆண், ஒருவர் பெண் எனவும் தெரியவந்துள்ளது.
மக்களவைக்குள் அத்துமீறி பிடிபட்ட இருவரிடம் டெல்லி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாராளுமன்றில் பதற்றம் புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்
பார்வையாளராக உள்ளே நுழைய யார் பரிந்துரை செய்தது? மற்றும் பிடிபட்டவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
பிற புலனாய்வு முகமைகளும் அவர்களிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான புதன்கிழமை (13) நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு
- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்
- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது
- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின
- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை
- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்
- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு
- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்
- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்
- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்


















