மர்மநபர்கள் தாக்குதல் 40 பேர் பலி - 100 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

மர்மநபர்கள் தாக்குதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்

மர்மநபர்கள் தாக்குதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றினால் 40 பேர் வரை உயரிழந்துள்ளதுடன் 100 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொஸ்கோவில் ‘பிக்னிக்’ என்ற இசைக்குழுவின் கச்சேரியில் கலந்துகொண்ட மக்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இசை அரங்கு ஒன்றில் நுழைந்த 5 மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் மர்மநபர்கள் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்தினை தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றில் பதற்றம் புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்
Posted in உலக செய்திகள்

பாராளுமன்றில் பதற்றம் புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்

பாராளுமன்றில் பதற்றம் புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்

அத்துமீறிய இருவரும் வண்ணத்தை உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய இருவரால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.

தடை செய்யப்பட்ட பொருட்களுடன் மக்களவையில் நுழைய முயன்ற இருவரை தடுத்துநிறுத்தி பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆண், ஒருவர் பெண் எனவும் தெரியவந்துள்ளது.

மக்களவைக்குள் அத்துமீறி பிடிபட்ட இருவரிடம் டெல்லி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாராளுமன்றில் பதற்றம் புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்

பார்வையாளராக உள்ளே நுழைய யார் பரிந்துரை செய்தது? மற்றும் பிடிபட்டவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

பிற புலனாய்வு முகமைகளும் அவர்களிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான புதன்கிழமை (13) நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீடியோ