நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்
நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் ,கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்
24 மற்றும் 34 வயதுடைய இரு இளைஞர்கள், கஹட்டகஸ்திகிலிய, இஹல கன்ஹிடிகம ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பொல்கஹவெல மற்றும் புஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
நேற்று (20) மாலை மேலும் இருவருடன் மது அருந்திவிட்டு ‘இஹல கன்ஹிடிகம’ ஏரியில் குளிப்பதற்குச் சென்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











