காஷ்மீரில் துப்பாக்கி சூட்டு தாக்குதல்
துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் ,காஷ்மீரில் ஆயுதக் குழுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பலியாகியுள்ளனர் .
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பக்த கோடிகளை இலக்கு வைத்து ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தினர் .
துப்பாக்கி சூட்டு தாக்குதல்
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 10 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளதாக காஷ்மீர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்ட 24 மணி இடைவெளியில் இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
இது இந்தியாவின் மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட முதல் காடு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது .
அப்பாவி பொதுமக்கள் மீது ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு இந்தியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் சிறப்புப் படைகள் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .
விசேட கண்காணிப்பு
தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் ,விசேட கண்காணிப்பு படலங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசுக்கும் காஷ்மீருக்கு இடையில் ,கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது .
இஸ்லாமிய அமைப்புகள் ,தமது தாயக விடுதலை கோரி ,காஷ்மீரில் போராடி வருகின்றனர் .
அந்த அமைப்புகளையும் மக்களையும் ,இந்திய இராணுவம் நசுக்கி அடக்கி ஒடுக்கி வருகின்றமை ,இங்கே குறிப்பிடத்தக்கது.
- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்







