தப்பி ஓடு ….!

Spread the love

தப்பி ஓடு ….!

வண்டமிழ் வீரத்தை
வந்தவன் கொய்வதோ ..?
வாலாட்டும் நாய்களாய்
வண்டமிழ் மலர்வதோ ..?

கூணாது பேசும்
கூனிகள் வாய்களிற்கு …..
நகல்களாய் மாறும்
நகைச்சுவை ஆணீரோ ..?

வீர திருமறைகள்
விளையாது என்றெண்ணி …..
முதிர் கன்னி விழி நீராய்
முன்னே வீழ்ந்தீரோ ..?

உறங்கி போனதால்
ஊர்வலம் போகின்றீர் …
நாளை எழுவார்
நரகத்தில் மறைவீர் ….

கருணாக்கள் உயிலில்
கரிகாலன் உறைந்தான் …
கண்ணிலா பொழுதிலும்
கருணாக்கள் பயந்தான் ….

பேருக்கே அஞ்சும்
பெருச்சாளிகள் எல்லாம் …
முரசு அறைந்தீரோ ..?
முன் எச்சரிக்கை மறைவீர் ..!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -05/02/2019

Home » தப்பி ஓடு ….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *