சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா
சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா குமர திசாநாயக்க ஆட்சி என மக்கள் கண்ணீரோடு தெரிவித்து வருகின்றனர் .
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய அனுரா குமார திசாநாயக்க, மக்களுக்கு மிக பெரும் சேவை ஆற்றுவார் என கருதப்பட்டு வரும் நிலையில் ,பதவி ஏற்று மூன்று நாட்களுக்குள் மருத்துவர் அர்ச்சுனாவை சிறையில் அடைந்துள்ளார் .
இது திட்டமிட்ட பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயக்க பட்டு வருவதாகவே அடித்தட்டு மக்கள் மன்றம் உளவியல் காணப்படுகிறது .
வடக்கு தமிழர் பகுதியில் தமது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள முடியா நிலை ஏற்படலாம் என்பதால் ,மருத்துவர் அர்ச்சுனாவை மிரட்டி அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் அனுரா குமார திசாநாயக்க ஈடுபட்டுள்ளார் என்றே அடித்தட்டு பாமர மக்கள் உளவியல் கூற்று காணப்படுகிறது .
ஆகவே மக்களின் இந்த மனோ நிலை என்பது ஆளும் அனுரா குமார திஸாநாயக்கவிற்கு எதிரான எதிர்ப்பு அலையடை உருவாக்கியுள்ளது .
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனத்த்தை அனுரா குமார திசாநாயக்க பெறவேண்டுமாகாக இருந்தால் மருத்துவர் அர்ச்சுனா மீது அடாவடி அடக்குமுறையை பிரோயோகிக்காது செல்ல வேண்டும் .
அவ்வாறு கண்டும் காணாது போன்ற செயல் ,அல்லது அவரது பயணத்திற்கு தடை விதிக்கா மென்போக்கு நிலையை அனுரகுமார திசாநாயக்க கடைபிடிக்க வேண்டும் ,
அது தவறினால் தமிழ் மக்கள் மனங்களில் நிலையான இடம்பிடித்து வெற்றி நடை போட முடியா நிலை ஏற்படலாம் .
ஆகையால் அனுரா குமார திசாநாயக்க கட்சி மற்றும் அதில் அங்கம் வகிக்கும் தமிழ் தலைமைகள் உள்ளிட்டவர்கள் இதனை கவனத்தில் எடுத்து பயணிக்க வேண்டும் .
அர்ச்சுனாவை தொடர்ந்து சிறை படுத்தினால் அதுவே அர்ச்சுனாவிற்கு அனுதாப அலையயை மக்கள் மத்தியில் தேடி தருவதுடன் ,அதிக வாக்குகளை பெற்று மருத்துவர் அர்ச்சுனா கட்சி வெற்றி நடை போட வழி வகுக்கும் .
ஆக மொத்தம் அர்ச்சுனாவை தொட்டால் அனுரா கட்சி செத்தான் என்கின்ற நிலைதான் காணப்டுகிறது .
இந்த அரசியல் சதுரங்கம் கொஞ்சம் வித்தியமான பாடத்தை தமிழர்கள் மத்தியில் அனுரா குமரா திசாநாயக்கவிற்கு உருவாக்கலாம் .
ஆகையால் நான் இலங்கை வாழ் மக்கள் ஜனாதிபதியென அனுரா குமார திசாநாயக்க கருதினால் ,நாம் மேலே
குறிப்பிட்ட விடயங்களை அந்த கட்சி ,மற்றும் மேல் மட்டங்கள் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
சுருங்க சொன்னால் கரணம் தப்பினால் மரணம் என்பது தான் ,மேலும் சொல்ல போனால் எனது கணிப்பின் அடிப்படையில்
115 ஆசனங்களை மட்டுமே அனுரா குமார திஸாநாயக்காவினால் பெற முடியும் நிலை காணப்படுகிறது .
தனி பெரும்பாண்மை பலத்த பாரளுமன்றில் நிரூபிக்க வேண்டுமானால் ,நாம் கூறும் இந்த விடயத்தை காதில் போட்டு வாயில் ஆட்டுங்கள் அனுரா குமார திசாநாயக்க கட்சியில் அங்கம் வகிக்கும் பெரும் மக்களே .
- வன்னி மைந்தன் –
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்










