கொரனோ மேலும் அதிகரிக்கலாம் – இராணுவ தளபதி எச்சரிக்கை

Spread the love

பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் எதிர்வரும் 5 நாட்களுக்குள் கொரோனா தொற்றாளர்கள், அடையாளம் காணப்படலாம் என

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்கள்

பலர், நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளதாகவும், இதன்மூலம்

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களில்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால்,

இன்னும் 2,3 நாட்களில் அந்த பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவை நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *