கொஞ்சி விளையாட
புலர்ந்தது பொழுது
மலர்ந்தது என் வதனம்
எழுந்தேன் படுக்கைவிட்டு
தொழுதேன் உன்கால்களை
ஏன் என்று நீ கேட்கிறாயா?
எப்போதேனும் உன் கால்களை
வார நான் குனியும் போது
உனக்கு ஐயம் வராதல்லவா?
சரியன்பே கொஞ்சம்
சிரி உன்னிதழ்விரித்து…
குளிர்த்து நீராடிவிட்டு
குளிர்போக சுடுநீரில்
அன்பைக் கலந்து
அணங்கு நான்
தேநீர் தயாரிக்க
போகணும் அன்பே…
சிரி ஒருமுறை சிரி
குவி உன்னிதழைக் குவி
கவி நீயானாலும்
பல கவி நான்
எழுதுவேன் உன்னிதழ் மேல்..!
மங்கை நான் அருகிருக்க
அங்கை அள்ளத் துடிக்கையில்
அன்பே…
கொங்கைகள் ஏங்குமடா!
சங்குக் கழுத்தும்
உன்னிதழ் முத்தத்திற்காக
காத்திருக்குதடா!
பொங்குகின்ற இன்பம் கோடி
மங்கை எனக்குள்ளே…
ஏங்குகின்ற என்னை ஏனடா
அலட்சியம் செய்கிறாய்?
தூங்குகின்ற சிறு பிள்ளை போல
பாசாங்கு செய்யாதே
நடிக்காதே எழுந்திரு
துடிக்கின்றேன் காளையே
உன் அணைப்புக்குள்
நான் அடங்கணும்
சத்தமின்றி நீ இடும்
முத்தத்தில் நான் உருகணும்
மஞ்சத்தில் தோகை விரித்து
நெஞ்சில் தலைசாய்த்து
கெஞ்சலோடு நான் சிணுங்கணும்
தொட்டிலில் கொஞ்சி விளையாட
சிறு முல்லைப் பூவொன்று
நீ தருவாயா..!
பிஞ்சு விரல்கள்
என் தேகம் தொடுகின்ற
இன்பம் அதுவும் தருவாயா..!!
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

- கவலைப் படுகிறேன்







