ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்
ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம், யாழ்ப்பாணம் அச்சுவலி பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்த மர்மகும்பல் அங்கு திடீர்னு நடத்தி மோட்டார் சைக்கிள் எரித்து வீடுகளை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர் .
மாற்று பாலினத்துக்கு எதிராக குறித்த ஊடகவியலாளர்கள் மாற்றுக்கருத்தினை தெரிவித்த நிலையில் ஆக்கிரமித்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது .
ஆனால் மிகப்பெரும் ஊடகவியலாளராகவும் மக்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருபவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளரான பிரதிபரின் வீட்டின் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றது .
இந்த தாக்குதல் தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.
இதன் பொழுது போக்கில் உள்ள வாகனங்கள் சேதமாக்கப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தின் ஆளுநரின் விசேட உத்தரவின் அடிப்படையில் நான்கு போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விசாரணையின் பொழுது மர்ம நபர்கள் தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களது பின்புலம் யாது என்பது விரைவில் தெரியவரும் என்பதாக அந்த ஊடக நபர் வட்டாரங்கள் ஊடாக செய்திகள் வெளியாகி உள்ளது .
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான வாள் வெட்டு அத்துமீறல் சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன .
காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிப்பு
எனினும் காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிக்கப்பட்டுள்ள பொழுதும் இவ்வாறான பல்வேறுபட்ட சம்பவங்கள் தொடர்கின்றன .
தாலியறுப்பு சம்பவங்கள், நகைதிருட்டுகள், தடுக்க முடியாது இலங்கை போலீசார் திணறி வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது ஊடகவியலாளர் வீட்டில், இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,பேசு பொருளாக தற்போது மாற்றம் பெற்றுள்ளது.











