இலங்கையில் மேலும் ஒரு கொரோனா தொற்று நோயாளி மரணம்

Spread the love

இலங்கையில் மேலும் ஒரு கொரோனா தொற்று நோயாளி மரணம்

இலங்கையில் நேற்று மேலும் ஒரு கொரோனா தொற்று நோயாளி மரணமாகியுள்ளார்.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் (30) உயிரிழந்த நோயாளியின் PCR பரிசோதனை அறிக்கைக்கு

அமைவாக கொவிட் 19 தொற்று நோயாளி என்பது சற்று முன்னர் தொற்று நோயியல் பிரிவினால் உறுதி செய்யப்பட்டுள்ளது..

உயிரிழந்த இவர் 54 வயது பெண் ஆவார்.

கடந்த 29 ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நாட்பட்ட நோய்களினால் அவதிப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இது இலங்கையில் பதிவான 20ஆவது கொவிட் 19 தொற்று நோயாளியின் மரணமாக தொற்று நோயியல் பிரிவு உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *