இலங்கையில் கொரோனா தொற்று ஒருவர் பலி
இலங்கையில் அதிகமாக கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்த சுகாதார அமைச்சு இன்று கொரோனாவினால் ஒருவர் பலி என உறுதிசெய்துள்ளது.
மே மாதத்தில் அநுராதபுரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாகவும்
தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக இன்று தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் நோயாளிகள் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், அநுராதபுரம், சாலியவத்தையைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்துள்ளார்.
ஆசியாவிலேயே தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்








