இலங்கையில் இதுவரை 1947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Spread the love

இலங்கையில் இதுவரை 1947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் நேற்றைய தினம் 22 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து நாட்டில் இதுவரை 1947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகியதாக இனம் காணப்பட்ட 22 பேரில் 18 பேர்

டுபாய் நாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஏனையவர்களுள் கட்டாரில் இருந்து வருகை தந்த இருவர், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும்

ரஷ்யாவில் இருந்து வருகை தந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 1421 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *