இலங்கையில் அதிகரிக்கும் விபச்சாரம்

இலங்கையில் அதிகரிக்கும் விபச்சாரம்
Spread the love

இலங்கையில் அதிகரிக்கும் விபச்சாரம்

இலங்கையில் அதிகரிக்கும் விபச்சாரம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையில் பெண்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் இவர்களுள் பலர் தமது

வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழில்களை நாடுவதாகவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ANI செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக பெண்கள் பாலியல் தொழில்களை நாடும் நிலை அதிகரித்துள்ளதாகவும் பாலியல் தொழிலில்

ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் Standup Movement lanka என்ற அமைப்பு குறித்த செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் இலங்கையில் பாலியல் தொழிற்றுறை 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் தொழில்வாய்ப்பை இழக்கும் பெண்கள் மசாஜ் நிலையங்களுக்கு


தொழிலுக்கு செல்வதுடன் பாலியல் ரீதியான தொழில்களில் ஈடுபடுவதாகவும் குறித்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.

வீரம் விளைந்த தமிழர்களுக்கு நடந்த மிக கொடூரமான செயலாக இதனை பார்க்க முடிகிறது .தமிழர் சமூகம் தெளிந்து இந்த விடயங்களை தடுக்க முடியும்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *