இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து
Spread the love

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து ,இலங்கையிலிருந்து பாகிஸ்தான் லாகூர் செல்லும் விமான பயணங்கள் திடீரென தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானத்துறை அறிவித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் திடீர் யுத்தம் ஒன்று தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறான நிலையில் எவ்வேளையும் விமானங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படலாம் என்கின்ற வகையில் ,தற்போது இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் மூண்டுள்ள இந்த திடீர் யுத்தம் காரணமாக ,அங்கு செல்லும் மக்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக இவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து, இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மசூதி உள்ளிட்ட வீடுகள் கட்டடங்கள் இடிந்து அழிந்தன. மேலும் 26க்கு மேற்பட்டவர்கள் பலியாகியம் 46க்கு மேற்பட்டவர்கள் காயாமடைந்தனர் .

இதனை அடுத்து குறித்த விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் பயன்படுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தினால், இந்த தற்காலிக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இருந்து லாகூர் செல்ல விருந்த பயணிகள் தத்தளித்து வருகின்றனர்.

மறு அறிவித்தல் வரை இந்த விமான சேவைகள் நிறுத்தி செய்யப்பட்டிருக்கும் வரை தெரிவிக்கப்படுகிறது.