இப்படி வாழ்ந்து இறந்து போ ..!

Spread the love

இப்படி வாழ்ந்து இறந்து போ ..!

சின்னம் சிறு எறும்பிடை கற்றுக்கொள்ளு – அதன்
நிகழ்ச்சி நிரல் மெல்ல வந்து எடுத்து கொள்ளு
உடலை விட பன்மடங்கு சுமக்குது பார்
உலகிலேறி தன் புகழை விதைக்குது பார்

பார்வையிலே சிறிதென்று ஒதுக்கி வைத்தார் – இவர்
பலத்தை கண்டேன் வியந்து நின்றார் ..?
போர்வைக்குள்ளே மறைந்திருந்தால் சூடுவரும் – குளிர்
போர்வை விட்டு எழுந்துவிட்டால் தெரிந்து விடும்

சிந்தையுளார் மன்றில் வந்து பேசிடுவார் – சபை
சிரிக்கும் படி தன்பேச்சை வைத்திடுவார்
அறிவு தன்னை அறிந்துவைத்து அவிழ்த்திடுவார்
அதனாலே உச்சி புகழ் பெற்றுவிட்டார்

வறுமையுளார் வலிகள் தன்னை படித்திடுவார்
வலி சுமந்தார் வாழ்வினிலே வென்று நிற்பார்
ஆணவத்தை தலைமேல வைத்து விட்டார்
ஆணிவேர் அறுத்தெறிந்து வீழ்ந்திருப்பார்

உன்னிடத்தில் உள்ளதை கொடுத்து பார் – இவர்
உள்ளம் மகிழ உன்னை நினைத்திருப்பார்
இறந்த பின்னும் இவ்வையம் வாழ்ந்திருப்பார்- இவர்
இறைவனாக மக்கள் மனம் போற்றிடுவார் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 09-11-2021

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *