இருவர் கைது துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
இருவர் கைது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ,மாத்தறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
மாத்தறை நவிமன பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்றதற்கு உதவிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென் மாகாண செயற்பாட்டு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி மாத்தறை நவிமன பகுதியில் காரில் வந்த இருவரால் 26 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
விசாரணைகளின் அடிப்படையில் காரின் சாரதி மாத்தறை தோட்டமுன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 29 வயதுடையவர் எனவும் STF தெரிவித்துள்ளது.
மேலும், கொலையை மேற்கொள்வதற்காக கண்காணிப்பாளராக செயற்பட்டதாக நம்பப்படும் 26 வயதுடைய நபர் ஒருவரும் கேகனதுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஆரம்ப விசாரணைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்







