இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம்
இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம் என காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர் .
மஹாஓயா அரலகங்வில வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 22 பேர் காய மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து விபத்துக்கு காரணமான பேருந்து சாரதி ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது அலட்சியப் போக்கும் போட்டி போட்டு பேரூந்தை ஒட்டி சென்றதன் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து விபத்தில் காயம் அடைந்தவர்கள் இரண்டு ஆண்கள் 12 பெண்கள் ஆறு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற போட்டியின் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்ட பொழுது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரடி சாட்சிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற பேருந்து விபத்துகளினால் பல மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர் .
அவ்வாறு இந்த விபத்துக்கள் இடம் பெறுவதற்கு சாரதிகள் முக்கிய காரணமாக அமைகின்றனர்.
அவ்வாறே இந்த தனியார் பேருந்து இரண்டும் நேரெதிர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதும் அப்பாவி மக்கள் காயமடடைந்தும் இருந்தும் காணப்படுகின்றனர்.
நாள்தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான பேருந்து விபத்துக்களினால் பேருந்தில் பயணிப்பதற்கு மக்கள் தற்பொழுது அச்சம் அடைந்து வருவதாக பேருந்து பயணிகள் தெரிவிக்கின்றனர்.
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்








