ஆயுதம் காட்ட அழைத்துச் செல்வார்களோ நாமல்
ஆயுதம் காட்ட அழைத்துச் செல்வார்களோ நாமல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்க விடுமுறை நாளில் என்னை அழைத்தனர். தெரிந்து கொண்டதன் பிரகாரம் எயார் பஸ் விவகாரம் தான், நான் பயப்படவில்லை. எனினும்,
ஆயுதத்தை காண்பிக்க அழைத்துச் செல்வார்களோ என்று தெரியவில்லை என்றார்.
விடுமுறை நாளில் எங்களை அழைத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று, கைது செய்து சிறையிலடைப்பதற்கு எடுக்கும் முயற்சியை, நீதிமன்ற
நாட்களில் நீதிமன்றங்களுக்கு வரும் நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.






