அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்
Spread the love

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம் புதிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா இராமநாதன் அமர்ந்து கருத்து வெளியிட்டமையினால் அவர் தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்