Tag: வெள்ளைப்படுதல்
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்
கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில் மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.
கர்ப்பத்திற்கு முன்பாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகரிக்கத் தொடங்கும். அதன் காரணமாக வழக்கத்தை விட சற்று அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.
ஆனால் அதன் அளவு அதிகமாகிக் கொண்டே போனால் அது கருப்பை நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.
பொதுவாக கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இயல்பாகவே இந்த ஹார்மோன் சுரப்பின் காரணமாக வெள்ளைப்படுதல் இருப்பது
இயல்பு தான். ஆனால் அதன் அளவு மற்றும் நிறங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்
ஈஸ்ட் தொற்று போன்றவற்றாலும் இந்த வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்படலாம். கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில்
மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.
கர்ப்பம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே வெள்ளை்படுதலின் அளவு அதிகமாகிக் கொண்டே போனாலோ அல்லது நிறத்தில் வேறுபாடு இருந்தாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பு திரவம் பல மாதங்களுக்குத் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பது குறைப்பிரசவத்துக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கர்ப்ப
காலத்தில் சிறுநீர் கழித்தலின்போது அதிகப்படியான வலியும் வெள்ளைப்படுதலும் ஏற்பட்டாலோ அல்லது பிறப்புறுப்பு வீக்கம், அரிப்பு மற்றும் எரிச்சல் இருந்தாலோ அது ஈஸ்ட் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
பிறப்புறுப்பு திரவம் பச்சை மற்றும் மெல்லிய சிவப்பு நிறத்தில் வெளியேறினாலோ அல்லது எரிச்சலுடன் வெளியேறினாலோ அவை ட்ரை- கோமோனியாசிஸ் மற்றும் பிற பாலியல் தொற்றுக்களின் அறிகுறியாக இருக்கலாம்.
பிறப்புறுப்பு பகுதியில் இருந்து மீனின் வாசனையோடு பிறப்புறுப்பு திரவம் வெளியேறினால் அது வஜினோசிஸ் போன்ற பாக்டீரியல் தொற்றுக்களாக இருக்கலாம்.
ஒருவேளை கர்ப்ப காலத்தில் வலி மிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து சிவப்பு நிறத்தில் திரவம் வெளியேறினால்
எந்த தாமதமும் இன்றி மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வைத்தியம்
வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வைத்தியம்
வெள்ளைப்படுதல் நோயால் அவதிபடும்பொழுது பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில்அரிப்பு ஏற்படுவது சகஜம்.
தொடர்ந்து சுரக்கும் வெள்ளைப்படுதல் திரவம் அப்பகுதியை ஈரம் மிக்கதாக மாற்றி தொற்று உண்டாக வழி வகுக்கிறது.
வெள்ளைப்படுதல் கேடு
எல்லா சமயங்களிலும் வெள்ளைப்படுதல் கேடு விளைவிப்பது அல்ல. சில சமயங்களில் அது துர்நாற்றம் இல்லாமல் இருக்கும். ஆனால் துர்நாற்றம் இருந்தால் தொற்றின் அடையாளம் அது.
பொதுவாக மருத்துவர்கள் வெள்ளைப்படுதல் திரவத்தை பரிசோதித்து, எந்த வகையை சார்ந்தது என்பதை அறிந்த பிறகே சிகிச்சை அளிக்கின்றனர். இயற்கையாக எல்லாப்
பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் இத்திரவம் பிறப்புறுப்பை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, மற்றும் கேடு விளைவிக்கும் பாக்டீரியாவை விரட்ட சுரக்கிறது
என்றாலும், வெள்ளைப்படுதலிருந்து துர்நாற்றம் வீசினாலோ அல்லது நிறம் மாறினாலோ அது லீயுகோர்ஹியா என்னும் வெள்ளைபடுதல் நோயின் அறிகுறியாகும்.
வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வைத்தியம்
இங்கே சில எளிமையான வீட்டு சிகிச்சை குறிப்புகள், வெள்ளைபடுதல் நோயை விரட்ட கொடுக்கப்பட்டுள்ளது:
1.நெல்லிப் பொடி
இந்த நெல்லிக்காய் வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை சிறிது தேனுடன் சேர்த்து தினமும் உண்டு வந்தால், நாளடைவில் நீங்கள் மாறுதலை உணர்வீகள்.
2.வெண்டைக்காய்
இந்நோயை குணமாக்க வெண்டைக்காய் மிக பயனளிக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க விடவும். பின் அந்த நீரை ஆற
விடவும். அதில் 100 மிலி தேன் சேர்த்து தினசரி இருவேளை அருந்தவும். ஒரு மாதத்தில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
3.நன்கு கனிந்த வாழைப்பழம்
நன்கு கனிந்த வாழைப்பழங்கள் வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு நிச்சயமான தீர்வாகும். ஒரு கனிந்த வாழை பழத்தை நெய்யுடன் உண்ணவும். அல்லது அதற்கு
மாறாக ஒரு பழத்துடன் ஒரு டம்ளர் பால், அரை தேக்கரண்டி நெய் எடுத்துக் கொள்ளவும். விரைவில் வெள்ளைப்படுதல் அதற்கான பலனை உணர்வீர்கள்.
4.கொத்தமல்லி விதைகள்
வெள்ளைப்படுதலுக்கான சிகிச்சையில் கொத்தமல்லி விதை பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி கொத்தமல்லி விதைகளை எடுத்து, ஓர் இரவு நீரில் ஊற வைக்கவும்.
காலை எழுந்தவுடன் தினமும் இந்த நீரை பருகவும். விரைவில் வெள்ளைபடுதல் நோய் குணமாகிவிடும்.
5.இளநீர்
தினமும் இளநீர் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகிவிடும். உடலை குளிர்ச்சியாக்கி, நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது. நீங்கள் காரட் ஜூஸ் அல்லது ஆட்டு பால் குடிக்கலாம். அதுவும் இந்நோய்க்கு நல்ல மருந்தாகும்.
6.அதிமதுரம் பொடி
ஆயுர்வேத மருத்துவம் வெள்ளைப்படுதல் நோய்க்கு அதிமதுரம் ஒரு மிக சிறந்த மருந்து என்று கூறுகிறது. இந்நோய் சற்றே தீவிரமாக இருந்தால், அரை தேக்கரண்டி அதிமதுர
வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வைத்தியம்
பொடியை தேனுடன் குழைத்தது தினசரி இருவேளை உண்ணவும். குணமடைய தொடங்கியதும், இருவேளைக்கு பதில் தினசரி ஒருவேளை உண்ணவும்.
7.படிகாரம் மற்றும் தயிர் களிம்பு
இந்நோயால் அவதிப்படும்பொழுது பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்படுவது சகஜம். தொடர்ந்து சுரக்கும் திரவம் அப்பகுதியை ஈரம் மிக்கதாக மாற்றி
தொற்று உண்டாக வழி வகுக்கிறது. அதனால் அரிப்பு ஏற்படுகிறது. ஒரு சிட்டிகை படிகாரத் தூள் எடுத்து அதை ஒரு தேக்கரண்டி தயிருடன் கலந்து பிறப்புறுப்பை சுற்றி
ஜாக்கிரதையாக தடவவும். சில நாட்களில் அரிப்பு ஏற்படுவது குறைந்து வெள்ளைபடுதலும் குறையத் தொடங்கும். தயிரில் இருக்கும் நல்ல ப்ரோபையாடிக் பாக்டீரியா இந்த செயலை ஆற்றுகிறது.
8.சாத தண்ணீர் அல்லது வடிகஞ்சி
ஆயுர்வேத மருத்துவப்படி, சாதம் வடித்த தண்ணீர் இது போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக செயலாற்றுகிறது. அரை கிண்ணம் சாதத்தில், அரை டம்ளர் தண்ணீர் விட்டு
ஊற வைக்கவும். பின் சில மணி நேரங்கள் கழித்து சாதத்தை வடித்துவிட்டு அந்த நீரை பருகவும். உங்கள் நோய்க்கு தீர்வு கிடைக்கும் வரை இதை தொடரவும்
பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்
பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்
பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும்.
பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்…அலட்சியம் வேண்டாம்….
வெள்ளைப்படுதல்
இன்றைய சூழலில் பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனை வெள்ளைப்படுதல் ஆகும்.
பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் நோயாக இல்லாவிட்டாலும்
சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும். 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களே இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் பிறப்புறுப்பில் அமிலத்தன்மை கொண்ட நிறமற்ற லேசான பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவம் இயற்கையாக சுரந்து கிருமித் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.
தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை, காரத்தன்மையாக மாறும்.
பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்
அதனால் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என அந்த திரவம் வெளிப்படும். சிலருக்கு பிறப்புறுப்பில் அரிப்பும், துர்நாற்றமும் கூட ஏற்படலாம்.
இவை ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால்
இந்த பிரச்சனை ஏற்படலாம். மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும்.
சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.
மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம். பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது. நீண்ட நாட்களாக கருத்தடை
சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.
தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம். அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.
வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டாலும் கூட வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை மருத்துவபரிசோதனை மூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதே பல சிக்கல்களை தடுக்கும்
.






