Tag: வீட்டுக்கு தீ
பிரிட்டன் பிரதமர் வீட்டுக்கு தீ
பிரிட்டன் பிரதமர் வீட்டுக்கு தீ
பிரிட்டன் பிரதமர் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரோமேனியாவை சேர்ந்த நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் ஆளும் பிரதமராக கூடிய இஷ்டமருடைய சொந்தமான வீடுகள் மீது தீவைக்கப்பட்டதான கூட்டம் சுமத்தப்பட்டுள்ளது.
வாகனம் தீப்பிடித்தது எரிந்தது
வடக்கு லண்டனில் உள்ள கெண்டிஷ் டவுனில் ஒரு வாகனம் தீப்பிடித்தது மற்றும் அதே தெருவில் உள்ள பிரதமரின் தனிப்பட்ட வீட்டில் தீ விபத்து மற்றும் வடமேற்கு லண்டனில்
அவர் முன்பு வாசித்த முகவரியிலும் தீ விபத்து ஆகிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன
தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றவாளிகள் கைது
அதனைத் தொடர்ந்து இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்ற இரண்டு ரோமணியங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
ஆளும் பிரித்தானியாவின் பிரதமர் முன்னாள் வீடு மற்றும் அவருடைய பகுதிகளில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தீ வைப்புச் சம்பவம் ஏன் இடம்பெற்றது இதற்கு பின்னால் பெரும் அரசியல் சக்திகள் ஏதும் இருக்கிறதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.
உக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்திற்கு ஆளுகண்ட பிரிட்டன் பிரதமர் உக்கிரனுக்கு ஆதரவாக பல மில்லியன்களை ஒதுக்கி உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
எனினும் பிரித்தானியா மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஈரான் அமெரிக்கா பேச்சு முடிவு போர் ஆரம்பம்

- 200 மில்லியன் புதிய வான்வழி ஆயுதங்களை வாங்கும் இஸ்ரேல்

- ஏர் இந்தியா ரத்து ஆட்டம் காணும் இந்தியா

- பறக்கும் கார்களை விநியோகிக்கும் சீனா

- இஸ்ரேல் கேடுகட்ட இராணுவம் வெடித்த சர்ச்சை

- காங்கிரஸ் பெண்மணி அன்சாரிக்கு எதிரான அச்சுறுத்தல்

- ஈரான் தாக்குதலில் அமெரிக்காவுக்கு பலத்த இழப்பு

- ஈரான் கப்பலில் ஆயுதங்கள் அடித்துவிடும் அமெரிக்கா

- ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுகிறார்

- டிரம்ப் முக்கிய நிர்வாகி பதவி விலகல்

- இயேசு சிலையை உடைத்தெறிந்த இஸ்ரேல் சிப்பாய்

- டிரம்புக்கு மக்கள் ஆதரவு சரிந்தது

குவைட் முதலாளியுடன் மனைவி ஆத்திரத்தில் கணவன் வீட்டுக்கு தீ
குவைட் முதலாளியுடன் மனைவி ஆத்திரத்தில் கணவன் வீட்டுக்கு தீ
குவைட்டில் பணிபுரிந்த பெண்ணொருவர் தனது முதலாளி மற்றும் சாரதியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார். அவ்விருவரும் அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்கியும் உள்ளனர்.
இதனால், மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. கடும் சண்டையும் ஏற்பட்டுள்ளது. பொறுமை இழந்த கணவன், மனைவியை தாக்கியுள்ளார். சனிக்கிழமை (30) வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் குவைட் முதலாளி, அவருடைய சாரதி கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகினர். சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான கணவரின் தந்தையின் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம், பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு வீதி, வெலிபோதாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சுமார் 40 வயதுடைய இந்தப் பெண், குவைத்தில் பணிபுரிந்து வந்த தனது முதலாளியான 80 வயதான அப்துல் சைட் ஆலபல்லாயன் மற்றும் அவரது சாரதி கே.கே.நாமல் ஆகியோருடன் வீடு திரும்பியுள்ளார்.
இதற்கு முன் பலமுறை அவ்விருவருடன் வீட்டுக்கு வந்துள்ளார்.இதுகுறித்து கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை (30) கடும் கோபமடைந்த கணவன், மனைவியை தாக்கி அவருடன் வந்த குவைத் நாட்டவர் மற்றும் டிரைவரை தாக்கி வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.
குவைத் நாட்டைச் சேர்ந்தவர், சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில், பிபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கிருந்த 70 வயது சுகயீமடைந்திருந்த கணவரின் தந்தையான திஸ்ஸ ஹெட்டியாராச்சி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை பிபில பதில் நீதவான் திரு.சரத் பண்டாரவினால் மேற்கொள்ளப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) நடைபெறவிருந்தது.
கணவன்தான் வீட்டுக்கு தீ வைத்தாரா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குவைட் நாட்டைச் சேர்ந்தவரை விசாரிப்பதற்கு மொழிபெயர்ப்பாளரின் உதவி பெறப்பட உள்ளது.










