Tag: வாக்கெடுப்பு
தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல்
தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல்
தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல் ,ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வாக்காளர் அட்டை விநியோகம் செப்டம்பர் 3 ஆம் திகதி தொடங்கும் என்றும், செப்டம்பர் 8 ஆம் திகதி அதற்கான சிறப்பு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஐநாவில் மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு
ஐநாவில் மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு
ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது .
இந்த பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையை பிரிட்டன் ,ஜெர்மனி ,கனடா ,மலாவி ,மொண்டெனேகுரே ,வடக்கு மாசிடோனியா போன்ற நாடுகள் இலங்கை தொடர் பான் தீர்மானத்தை தயாரித்துள்ளன .
இலங்கையில் நல்லிணக்கம் ,பொறுப்புக்கூறல் ,மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல் என்ற தலைப்பின் கீழ், இந்த வாக்கெடுப்பு இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படுகிறது .
இந்தியா வழமை போன்று வாக்களிப்பில் கலந்து கொள்ளாது என எதிர் பார்க்க படுகிறது .














