Tag: லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது
Posted in இலங்கை செய்திகள்
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது
Author: நிருபர் காவலன் Published Date: 27/10/2024
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது ,மீகஹஜதுரவில் போக்குவரத்து சோதனையின் போது நிறுத்தத் தவறிய லொறி மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
லுணுகம்வெஹரவிலிருந்து சூரியவெவ நோக்கி பயணித்த லொறியானது, பொலிஸாரின் சமிக்ஞைகளை மதிக்காமல், பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய, வாகனத்தின் ஒரு டயர் மீது துப்பாக்கியால் சுட்ட பிறகு வாகனம் நிறுத்தப்பட்டது.
இதன்போது, லொரி சோதனையிட்டபோது, 17 மாடுகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதற்கமைய, சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது








