ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

தம்மை இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையை சேர்ந்த சுதந்திரராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

ஆனால் இவர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.

தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை.

அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன்.

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை

பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன்.

இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும் இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

ராஜீவ் கொலையில் விடுவிக்க பட்ட நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தல்
Posted in இலங்கை செய்திகள்

ராஜீவ் கொலையில் விடுவிக்க பட்ட நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தல்

ராஜீவ் கொலையில் விடுவிக்க பட்ட நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தல்

இந்தியாவில் ராஜீவ் கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்க பட்டு வதைக்க பட்டவர்கள் நீதிமன்றினால் விடுவிக்க பட்டனர் .

இவ்வாறு விடுவிக்க பட்ட இலங்கையை சேர்ந்த நால்வரையும் ,இலங்கைக்கு நாடு கடத்தும் படி இந்திய உள்துறை அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது .

இலங்கைக்கு இவர்கள் சென்றாக அங்கு இவர்கள் புலிகள் என்ற போர்வையில் சிங்கள படைகளினால் சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Posted in உலக செய்திகள்

ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள்

ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள்

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் சிக்கிய பிரபலங்கள் தப்பிக்க விடப்பட்டு அப்பாவிகள் சிக்க வைக்க பட்ட அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது

ராஜீவ் கொலையில் முக்கிய பிரபலங்கள் தப்பிக்க விடப்பட்ட உண்மையின் ரகசியம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தமிழர் வேலுச்சாமி அவர்கள் இடித்துரைத்துள்ளார்

ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள் அவர்கள் எவ்விதம் தப்பிக்க விடப்பட்டனர் ,அப்பாவிகள் எவ்வாறு சிக்க வைக்க பட்டனர் என்ற பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்

இதுவரை வெளியில் கசியா பல ரகசிய முடிச்சுக்கள் இதில் அவிழ்க்க பட்டுள்ளது

இந்தியா மத்திய அரசும் மற்றும் தமிழாக அரசுகள் தமது அரசியல் நோக்கத்தின் அடைப்படையில் ராஜீவ் காந்தி படு கொலையை அரசியலாக்கி தமது சுக போக வாழ்விற்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர்

முப்பது ஆண்டுகள் கலந்துள்ள நிலையிலும் சிறைகளில் ராஜீவ் கொலை சந்தேக நபர்கள் விடுவிக்க படவில்லை

இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜீவ் காந்தியின் கட்டளையில் படு கொலை செய்ய பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு இதுவரை இந்தியாவை ஆளும் பிரதமர்கள் யாராலும் மன்னிப்பையோ அன்றி அந்த மக்களின் படு கொலைக்கு இழப்பீடுகளையோ வழங்கவில்லை

அப்பாவி கைதிகளின் வாழ்வில் விளையாடி அவர்கள் உணர்வை கொன்று கொஞ்சம் கொஞ்சமாக சிறையில் அடைத்து வதைக்கும் இந்திய அரசின் நிலைகள் மானமுள்ள மக்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது

தமிழீழ விடுதலை புலிகளின் பிரபாகரன் பிடரியில் அடித்து தள்ளிய ராஜீவ் காந்தியின் செயல்பாடு அரசியல் நாகரீகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது

தமிழ் மக்களின் அணையாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகளின் சம்மதம் இன்றி ஜே ஆருடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் தமிழர்களின் சமாதான படைகளாக விளங்கிய கற்பனை இந்தியா இராணுவம் படுகொலை இராணுவமாக மாற்றம் பெற்றது

அதன் தொடர்ச்சிகளில் ஒன்றே ராஜீவ் காந்தி படுகொலை என்ற திரைக்கதை எழுத பட்டு தமிழர்கள் மீது ராஜீவ் காந்தி படுகொலை பழிகள் சுமத்த பட்டன

உலக தமிழர்களே சற்று காதில் போடுங்கள் ..ராஜீவ் கொலையில் நடந்த தில்லு முள்ளு ,இது தான் அரசியல் விளையாட்டு என்பது உஙக்ளுக்கு புரியும் – வன்னி மைந்தன் –

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=heAmoxaa-QA