யோசி...நேசி...
Posted in கவிதைகள்

யோசி… நேசி…

யோசி… நேசி…

அந்திசாயும் இதமான நேரம்
மந்திகள் தொங்கும் மரநிழலின்கீழ்

உன் தோளில் என் தலைசாய்த்து
பன்னாட்டு கதை பல பேசி….

இனிமையான அப்பொழுதில்
இணைந்த நம் இதழ்களோடு

நாசிகள் உரசியவேளையில்
நங்கையிவள் சட்டென கூசி…

இன்னும் எத்தனையோ சில்மிசங்கள்
இவையனைத்தயும் ஒருநொடியில்

மறந்ததுமேனோ மன்னவனே
மனம் திறந்து நீ யோசி….

என் உடல் உருக உருக
உன்னையே தினமும் சுற்றி சுற்றி

கன்னக்குழிகள் தெரிய சிரித்து வந்த
பெண்ணிவளை ஒருகணம் யாசி…

பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்
விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து

தன்னந் தனிமையில் அல்லாடும்
கன்னியவளை வா வந்து நேசி…!