Tag: யோசி
Posted in கவிதைகள்
யோசி… நேசி…
Author: தமிழரசி Published Date: 04/05/2025
யோசி… நேசி…
அந்திசாயும் இதமான நேரம்
மந்திகள் தொங்கும் மரநிழலின்கீழ்
உன் தோளில் என் தலைசாய்த்து
பன்னாட்டு கதை பல பேசி….
இனிமையான அப்பொழுதில்
இணைந்த நம் இதழ்களோடு
நாசிகள் உரசியவேளையில்
நங்கையிவள் சட்டென கூசி…
இன்னும் எத்தனையோ சில்மிசங்கள்
இவையனைத்தயும் ஒருநொடியில்
மறந்ததுமேனோ மன்னவனே
மனம் திறந்து நீ யோசி….
என் உடல் உருக உருக
உன்னையே தினமும் சுற்றி சுற்றி
கன்னக்குழிகள் தெரிய சிரித்து வந்த
பெண்ணிவளை ஒருகணம் யாசி…
பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்
விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து
தன்னந் தனிமையில் அல்லாடும்
கன்னியவளை வா வந்து நேசி…!
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு









