Tag: யாழ்ப்பாணத்து
யாழ்ப்பாணத்து யூடியூபர் உட்பட நால்வருக்கு விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்து யூடியூபர் உட்பட நால்வருக்கு விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்து யூடியூபர் உட்பட நால்வருக்கு விளக்கமறியலில் ,யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளையில் நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூபர் உள்ளிட்ட
நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று, அதன் ஊடாக உதவி செய்வது போன்ற காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரின் வீட்டுக்கு இரவு வேளை சென்ற குறித்த நபர், பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே, காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும், தமது கண்டனங்களை தெரிவித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் சமரசம் பேசச் சென்றபோது, அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
பொலிஸார் யூடியூபரையும் மேலும் மூவரையும் கைது செய்து விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரணைகளின் பின்னர், நால்வரையும் விளக்கமறியலில் வைக்கவும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது விசாரணை நடத்தி கைது செய்யவும் மன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curry
யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curry
யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curry | king prawns curry | prawns curry | tamil style prawns curry
யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curryஇறால் கறி செய்யும் முறை
இறலை சுத்தம் செய்து கழுவி எடுக்கவும்.
இறால் 500 கிராம்
பெரிய வெங்காயம் 1
பெரிய தக்காளி 1
உல்லி 10 பல்லு
பச்சை மிளகாய் 3
இஞ்சி விளுது
தேங்காய் பால் பவுடர் 2 தேக்கரண்டி
கறித்தூள் 3 தேக்கரண்டி
வெந்தயம் 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை
புளி தேவையான அளவு
உப்பு
எண்ணெய்
மஞ்சல்
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இறால் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
சூடான எண்ணெயில் இறால்களை போட்டு பொரித்து எடுக்கவும் வைக்கவும்.
பெரித்த அதே எண்ணெயில் வெந்தயம் , உல்லி , வெங்காயம் , பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் .
என்னாம் வதங்கிய சட்டியில் தக்காளி மற்றும் இஞ்சி போட்டு வேகும் வரை வதக்கவும் .
பின் அதனுள் உப்பு மற்றும் கறித்தூள் சேர்க்கவும் . தூள் வெக்கை அடங்கியதும் அதனுள் புளி சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் அதனுள் தேங்காய் பால் சேர்த்து கிளறி 8-10 நிமிடம் நங்கு கொதிக்கவிடவும் .
சுவையான யாழ்ப்பாணத்து இறால் கறி தயார் .
யாழ்ப்பாணத்து கணவாய் பிரட்டல்
யாழ்ப்பாணத்து கணவாய் பிரட்டல்
யாழ்ப்பாணத்து கணவாய் பிரட்டல் செய்வது எப்படி .கேளே வரப்பியும் காணொளியில் நானம்மா சமையல் காலை நிபுணர் செய்து கண்ணப்பிக்கிறார் பாருங்கள் .
தேவையான பொருட்கள்
கணவாய் 1 கிலோ
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 3-4
இஞ்சி ஒரு துண்டு 2
உல்லி 4 பல்லு
கறி பவுடர் 3-4 தேக்கரண்டி
தேங்காய் பால் பவுடர் 3 தேக்கரண்டி
கறுவா ஒரு துண்டு
ஏலக்காய் 3-4
கராம்பு 3-4
கறிவேப்பிலை
ரம்பை
உப்பு தேவைக்கு
தேசிக்காய் பாதி
எண்ணெய் 21/2 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் கணவாயை நல்லா சுத்தம் செய்து எடுக்கவும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றவும் அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பெரிய சீரகம் , ரம்பை , கறிவேப்பிலை போட்டு சூடானதும் பச்சை மிளகாய் , வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
பின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து பொன் நிறம் மாறும் வரை வதக்கவும். பின் அதில் கணவாய் சேர்த்து நன்கு கிளறி 10-20 நிமிடம் அவிய விடவும் பின் அதில் உப்பு சேர்க்கவும்.
கணவாய் நன்றாக அவிந்ததும் அதில் கறி தூள் சேர்த்து தூள் வெக்கை போகும் வரை மூடி விடவும். பின் அதில் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கணவாய் கறி பிரண்டு வரும் வரை வைக்கவும்.
வாசனை திரவியங்களை வறுத்து எடுத்து மிக்ஸ்சி யாரில் போட்டு பவுடராக அரைத்து எடுத்து அதை கணவாய் கறிக்குள் போட்டு இறக்கி பரிமாரவும்.
- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்












