தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்
Posted in இலங்கை செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்

தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்

தெஹிவளை மிருகக்காட்சி சாலை தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டில் 4.8 மில்லியன் ரூபா பணத்தை அள்ளியுள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது .

இலங்கை வரும் வெளிநாட்டு உல்லாச பயணிகளை தெஹிவளை மிருகக்காட்சி சாலை கவர்ந்து இழுக்கும் ஒன்றாக காண படுகிறது .

இந்த தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் யானைகள் ,புலிகள் ,கரடி ,சிங்கம் ,புலி ,ஒட்டகம் என்பன பிரதான விலங்குகளாக இங்கே காண படுகின்றன .

இந்த காட்டு விலங்குகளை கண்டு இரசிக்க வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிகம் இங்கே தேடி வருகின்றனர் .

அவர்கள் ஊடாகவே தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் அதிக வருமானத்தை தெஹிவளை மிருகக்காட்சி சாலை பெற்று ,இந்த ஆண்டின் முதல் பகுதியில் சாதனை படைத்துள்ளது .

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை பாடசாலை மாணவர்கள் ,இன்று (23) முதல் நாளையும் (24), நாளை (25)மறுதினமும் இலவசமாக பார்வையிட முடியும்.

மிருகக்காட்சிசாலையால் பாடசாலை மாணவர்களுக்காக கல்வி கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கிற்கான நிகழ்ச்சிகளுடனான இந்த கண்காட்சி காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

இதேவேளை நாளை 24ம் திகதி 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடலாம். அவர்களுக்காகவும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, விலங்கியல் பூங்கா திணைக்களம் அறிவித்துள்ளது

இதேவேளை, நத்தார் தினத்தன்று மிருகக்காட்சிச்சாலைகளில் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 071 8095 868 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

No posts found.