Tag: மாவை
மாவையின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்
மாவையின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்
மாவையின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம் ,மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்று வருகின்றன.
அவரது புகழுடல் வைக்கப்பட்டுள்ள மாவிட்டப்புரம் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், 10.00 மணியளவில் அஞ்சலி உறைகள் இடம்பெறவுள்ளன.
அதனை தொடர்ந்து மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்
திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்
திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இரண்டு தேர்தல் பிரசாங்களில் பங்கேற்பதாக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா, இந்து சமய முறைப்படி வரவேற்றார்.
மாவை சேனாதிராஜாவின் தனிப்பட்ட அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி, அவரின் இல்லத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என நம்புவதாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்
காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்
காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம் ,தமிழரசு கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ள காய்ச்சல் காரணமாக தவறிய மாவை சேனாதிராசா தோழர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் .
யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள தர்மலிங்கம் நினைவு தூபியில் ,அவரது நினைவு நாளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் .
இதில் தர்மலிங்கத்தின் மகனான சித்தார்த்தன் ,அவருடன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் கலந்து கொண்டு தமது நினைவு அஞ்சலியை செலுத்தி .கொண்டனர்
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ,தமிழரசு கட்சி செயலாற்ற போவதாக அறிவிக்க பட்ட நிலையில் ,மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது .
அதனை அடுத்து தற்பொழுது தமிழரசு கட்சி பொதுவேட்பாளருக்கு ஆதரவு தரமறுத்து சஜித்துக்கு ஆதரவை வழங்கிட முன் வந்த நிலையில் ,அந்த கட்சியின் கூட்டத்தில் வக்கெடுப்பில் கலந்து கொள்ள தனக்கு காய்ச்சல் சுகவீனம் என கூறி தப்பித்து கொண்ட மாவை தற்போது தோழர் நினைவிடத்தில் கொட்டாவி விட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார் .
பெட்டிகளுக்கு இவர்கள் பேரம் போயுள்ளது இந்த கட்சி படத்தை பார்க்கின்ற பொழுது தெளிவாகிறது .
அரசியல் வியாபாரிகள் இவர்கள் என மக்கள் கோரியது உண்மை தான் போலும் .
- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது

- இலங்கையில் வெள்ளம் தினறும் நாடு

- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

- எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை

- இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்

- குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்

குத்துகரணம் அடித்த மாவை
குத்துகரணம் அடித்த மாவை
குத்துகரணம் அடித்த மாவை ,பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிவிப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியமை குறித்த செய்தி ஊடகங்கள் வாயிலாகவே தாம் அறிந்து கொண்டதாக எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் தெரிவித்தார்.
எனினும் தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானே என கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்து இருந்தார்.
அதனை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுப்பு தெரிவித்து அது கட்சியின் தீர்மானம் இல்லை என தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவில்லை. மத்திய குழுத் தீர்மானம் என்பது ஒரு கூட்டுத் தீர்மானம். மத்திய குழுவில் 30 பேர் கலந்து கொண்டார்கள்.
மாவை சேனாதிராஜாவிற்கு அறிவித்து அவரும் வருவதாக இருந்தார்.
உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்து அவர் கலந்து கொள்ளவில்லை.
மூத்த துணைத் தலைவர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற்றது.
மத்திய குழுவின் தீர்மானம் தான் சஜித் பிரேமதாசவிற்கு அதரவு வழங்குவது என்பது.
அதனையே அறிவித்தோம். எதிர்வரும் 4ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு. அதனால் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அவருடன் ஏற்கனவே நான் கதைத்துள்ளேன். இது தொடர்பாக நான் கதைக்கிறேன்.
மூத்த துணைத்தலைவர் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து மாவை சேனாதிராஜாவுடன் கதைப்பார் என்றார்.
- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது


















