மறைக்கப்பட்ட தமிழின அழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மறைக்கப்பட்ட தமிழின அழிப்பு

மறைக்கப்பட்ட தமிழின அழிப்பு

மறைக்கப்பட்ட தமிழின அழிப்பு ,இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் கட்சிகள் பரப்புரை செய்து வருகின்றன.

ஆனால் கடந்த அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இடம்பெற்ற பல்வேறுபட்ட நகர்வில் 5 தமிழர்கள் மட்டுமே கலந்து கொண்டதான புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன .

நாடு கடந்த அரசாங்கம், தலைமைச் செயலகம், அனைத்து உலக செயலகம்

நாடு கடந்த அரசாங்கம், தலைமைச் செயலகம், அனைத்து உலக செயலகம் , என பல்வேறுபட்ட குழுக்கள் இந்த புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற பொழுதும்,

இவர்களினால் அந்த விடயங்களை முற்று முழுதாக எடுத்துச் செல்லவில்லை என்கின்ற விடயம் வெளியாகி இருக்கின்றது .

அந்த அமர்விலேயே ஐந்து மக்கள் ஐந்து இலங்கை தமிழர்கள் மட்டுமே காணப்பட்டதாகவும் ஏனையவர்கள் அங்கு இவரும் வரவில்லை என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் தனக்கு தீர்வு கிடைக்க பெறும் என மக்களை நம்ப வைத்து ஒருவர் போலி நாடக அரங்கேற்றப்பட்டு வருவதாக அங்கு பணியில் அமர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர் .

இந்த விடயங்களை எடுத்துச் செல்வது பெஸ்கோ என்கின்ற தலைமையிலான குழு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் ஏனைய குழுக்கள்

ஆனால் நாடு கடந்த அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஏனைய குழுக்கள் அல்லது அமைப்புகள் என்பன இதிலிருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது .

தமிழருடைய விடுதலை வென்றெடுத்து தருவதாக தெரிவித்துக்கொள்ளும்,இந்த அமைப்புகள் யாவும் அங்கு கலந்து கொள்ளாது மௌனமாக இருப்பது ஏன் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது .

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பான ஆதாரங்கள் ஆவணங்கள் உள்ளதாக கூறிக்கொள்ளும் இவர்களினால் ,

அங்கு கொல்லப்பட்ட மக்களுடைய பரிபூரணமான ஆதாரங்களை வழங்கப்படவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது .

இலங்கை அரசாங்கம் 100 வீதம் செயற்பட்டு வருவதாகவோ ஆனால் தமிழர் இரண்டு வீதம் மட்டுமே செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவ்வாறு இந்த கட்சிகள் ஒன்றை ஒன்று பிரிந்து கிடப்பதினால் தமிழர் உடைய இன அழிப்பு தொடர்பான விடுதலை அங்கு கிடைக்கப்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது .

ஆனால் இதனை ஏனைய அமைப்புகள் ஏற்க மறுத்து வருகின்றன .

மக்கள் மத்தியில் பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளும் நோக்குடன் வருகின்ற இவர்கள் ,

ஐக்கிய நாடுகள் சபையில் சேர்ந்து ஊழல் சுத்தியுடன் மக்களுக்கான இணைப்பு தீர்வை பெற்றுக் கொடுக்க இவர்கள் மறுத்து வருவதாக, அந்த நபர்களூடாக தகவல் வெளியாகி இருக்கின்றன.