Tag: மனித உடல்கள்
குண்டு வெடிப்பு சிதறிய மனித உடல்கள்
குண்டு வெடிப்பு சிதறிய மனித உடல்கள்
குண்டு வெடிப்பில் சிதறிய மனித உடல்கள் ,எங்கும் பரவி காணப்படுகின்றன..
தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் இடம்பெற்ற ,இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் ,மனித உடல்கள் எங்கும் சிதறிய வண்ணம் , காணப்படுகின்றன .
தலிபான்கள் ஆண்டு வரும் ,இந்த கால பகுதியில், தொடராக குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தொடரும் இந்த குண்டு வெடிப்பு ஊடாக ,தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை சீர்குலைக்கும் நோக்குடனும் ,மேலும் தாலிபான்களுக்கு நெருக்கடியை தருவிக்கும் விதமாக ,இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் ,நடத்த பட்ட வண்ணம் உள்ளன .
இடைவிடாது தொடரு குண்டு வெடிப்பும் ,அதனால் பலியாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது .
தலிபான்கள் ஆட்சியில் ,அவர் தம் ஆளுமை மிக்க பகுதிகளில் இடம்பெறும் ,இந்த குண்டு வெடிப்பை கட்டுப்படுத்த முடியா நிலையில் ,தலிபான்கள் திணறிய வண்ணம் உள்ளனர் .
திகில் குண்டு வெடிப்பு பார்க்க இதில் அழுத்துங்கள்
இவ்வாறான குண்டு வெடிப்பு தொடர்ந்து சென்றால், தலிபான்கள் ஆட்சி அதிகாரம் இழந்து ,மீளவும் குழுநிலை போராளிகாகளாக, மாற்றம் பெறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
மேலும் இன்று நடந்த இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், பலியானவர்கள் எண்ணிக்கை விபரம் முழுமையாக வெளிவரவில்லை .
தாலிபான்களுக்கு இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் மூலம் ,இருண்டகாலம் ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
காருக்குள் 10 மனித உடல்கள் – பதறிப்போன போலீஸ்
காருக்குள் 10 மனித உடல்கள் – பதறிப்போன போலீஸ்
மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுப்பு: 2 பேர் கைது
மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுப்பு
காருக்குள் 10 மனித உடல்கள் – பதறிப்போன போலீஸ்
வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. தொழில் போட்டியின் காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள்
இடையே ஏற்படும் மோதல்களில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள ஜகாடெகாஸ் மாகாணத்தில் கவர்னர் அலுவலகத்துக்கு அருகே சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று நின்று
கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ
இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த அந்த காரை சோதனை செய்தனர்.
அப்போது காருக்குள் 10 பேர் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து,
போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் காருக்குள் 10 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இந்த படுகொலையின் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்கில் தொங்கும் மனித உடல்கள் – அதிர்ச்சியில் மக்கள்
தூக்கில் தொங்கும் மனித உடல்கள் – அதிர்ச்சியில் மக்கள்
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (20) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீட்டு ஒன்றில் வசிக்கும் குடும்பஸ்தர் வீட்டு கதவு வாயிலில் தூக்கில் தொங்குவதை கண்ட அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் அப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 34 வயதுடைய பெரியசாமி நாகராஜன் என்பவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மிதக்கும் மனித உடல்கள்- சிரிக்கும் உலகம்
மிதக்கும் மனித உடல்கள்- சிரிக்கும் உலகம்
மதவெறியால் இனம் ஒன்று
மரணம் விதைக்குதே – உலக
மன்றுகளும் இதனை கண்டு
மகிழ்வாய் சிரிக்குதே ….
உயிர் ஒன்றை குடிப்பாரை
உதைக்க மறுக்குதே – இந்த
உலக நீதி இதுவாச்சோ
உள்ளம் துடிக்குதே …..
குஞ்சோடே மறைந்து கிடந்தார்
குரலை வெட்டினான் …..
குருதி குடித்து வெறி ஏப்பம் இட்டே
குளறி சுற்றினான் …..
வாரம் ஒன்று கடக்கும் முன்னே
வழி மூவாயிரம் வீசினான் ….
வரலாற்று இன படுகொலையாய்
வாழ்வில் எழுதினான் …..

நீதி உள்ள மாந்தர் எல்லாம
நிரையாய் எழுகவே – நாளை
நீள விரியும் கொலைகள் தடுக்க
நிமிர்ந்தே வருகவே ………
அறம் இன்றி ஆளும் அரசின்
ஆட்சி குலையடா …..
அவலத்தோடே இறந்தார் ஆத்மா
அமைதியாக நிமிரடா …..!
வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் -02/09/2017
கடந்த ஒருவாரமாக மியன்மாரில் புத்த வாதிகளால் நடந்த முஸ்லீம் படுகொலைகள்
கண்டபோது…







