Tag: மஞ்சம்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்
இன்றைய பொழுதின் என் நிகழ்வு …!
இன்றைய பொழுதின் என் நிகழ்வு …!
சின்ன சின்ன ஆசை
சிரித்து பேச ஆசை
சின்ன அலை மோத
சிரித்து இரசிக்க ஆசை
மெல்ல வந்து காற்று
மேனி தழுவ பிடிக்கும்
மெலிந்த உடல் நாளும்
மேனி தாங்க பிடிக்கும்
அந்தி வானம் மெல்ல
அருகில் வந்தால் பிடிக்கும்
அந்த வேளை மஞ்சம்
அதில் உறங்க பிடிக்கும்
கண்கள் மூடி உறங்க
கனவு வந்தால் பிடிக்கும்
கண்ட கனவு நினைவில்
கலையா இருந்தால் பிடிக்கும்
போர்வைக் குள்ளே உடலை
புதைத்து உறங்க பிடிக்கும்
மோகம் ஏறி வந்தால்
மோதி உறங்க பிடிக்கும்
எட்டு மணி உறக்கம்
எட்டி முடிந்தால் பிடிக்கும்
எழுவான் காலை விடிந்தால் – விழி
எழுந்து திறக்க பிடிக்கும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-03-2022
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்
- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்
- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி
- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது
- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு
- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன














