யாழில் மணவனை தாக்கிய ஆசிரியர் கைது
Posted in இலங்கை செய்திகள்

போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது

போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பொலிஸாரினால் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது , 19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் 8 மற்றும் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது , தமக்கு, மல்லாகம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் என தெரிவித்துள்ளனர்.

அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மல்லாகம் பகுதிக்கு விரைந்த பொலிஸார் , போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 36 வயதுடைய பெண்ணொருவரை 40 போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

இலங்கை சீனன்குடா பொலிஸ் பிரிவில் போதை மாத்திரை வைத்திருந்த பொலிஸ்
அதிகாரி ஒருவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

போதை பொருளுடன் கைது செய்ய பட்ட உயர்நிலை பொலிஸ் அதிகாரி தீவிர விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்

இலங்கை பாதுகாப்பு படைகள் போதைவஸ்த்திற்கு அடிமையாகி ,குறித்த போதை பொருட்களை கடத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்

தமது அரச வாகனத்தில் மறைத்து எடுத்து செல்லும் பொழுது சிலர் சிக்கியும் இருந்தனர் ,
இலங்கையில் போதை பொருளுடன் நாளாந்தம் பலர் கைதாகி வருகினறனர்

போதைக்கு அடிமையான பெண்கள் உள்ளிட்ட சிறார்கள் கடத்தி ,கற்பழித்து கொலை செய்யப் படுகின்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது

மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி போதை பொருளுடன் கைது
செய்ய பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது