Tag: பொலிஸ்மா
பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர்
பொறுப்பேற்றார் பொலிஸ்மா அதிபர்
பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர் ,புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார்.
பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் கருத்து வௌியிட்ட அவர், தனது கடமைகளின் போது பொலிஸ் துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று குறிப்பிட்டார்.
பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வை
பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தாம் பணியாற்றி வருவதாகவும், இதற்காக அனைத்து பொலிஸ்
அதிகாரிகளிடமிருந்தும் உயர் செயல்திறனை எதிர்பார்ப்பதாகவும், புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
ஒழுக்கமான பொலிஸ் துறை
ஒழுக்கமான பொலிஸ் துறையை நிறுவுவதே தனது ஒரே நோக்கம் என்றும், அதனை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, பொலிஸ்மா அதிபராக நியமித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இதன்போது தெரிவித்தார்.
தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை
தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை
தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை ,தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குமாறு தெரிவித்து 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்குப் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்தனர்.
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா மா அதிபர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான விசேட குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று விவாதம் இன்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் எங்கே
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் எங்கே
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் எங்கே ,எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான நிஜாம் காரியப்பர், இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை,
நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகிறார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய காரியப்பர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யும்போது தென்னகோன் சமாதான நீதிபதி முன் கையொப்பமிட்டு சத்தியப்பிரமாணம் செய்ய
வேண்டியிருப்பதால், இந்த மனுவின் மூலம் அவர் இருக்கும் இடத்தை தீர்மானிக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.
“தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிடியாணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல்
செய்யும்போது உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். சமாதான நீதிபதி முன் சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட வேண்டும். அவர் சமாதான நீதிபதி முன் மனுவில் கையொப்பமிட வேண்டும்.
அந்த ஆவணம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. சமாதான நீதிபதியைக் கண்டு பிடித்தால், தப்பிச் சென்ற ஐஜிபியைக் கண்டுபிடிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
சட்ட அமலாக்க அதிகாரிகள் இந்த வழியில் சிந்திக்க வேண்டும் என்று கூறிய எம்.பி நிஜாம் காரியப்பர், “எங்கள் சிஐடிக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.
2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வருகிறார்.
கடந்த வாரம், தென்னக்கோன் தன்னைக் கைது செய்வதற்கான மாத்தறை நீதவானின் உத்தரவை இடைநிறுத்தி வைக்கக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தார்.
இருப்பினும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள கோரிக்கையின் அடிப்படையில், தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது.
நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு தடை
நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு தடை
நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு தடை ,இலங்கையின் பொலிஸ்மா அதிபராக கடமை ஆற்றி வரும் தென்ன கோணுக்கு தற்பொழுது நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது .
தேசப்பந்து அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை ரத்து செய்யும்படி உத்தரவை பிறப்பித்து இந்த அதிரடி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது .
இவரது நியமனம் சட்டபூர்வமானது அல்ல என நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்தே இவருக்கு ,தற்பொழுது போலீஸ் மா அதிபராக பதவி வகிக்க சிக்கல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போலீஸ்மா அதிபராக போலீஸ் தலைமை அதிகாரி ஒருவர் பதவி வகிக்க முடியாது என நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவு ,ஆனது இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது வேடிக்கை வினோத வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக காணப்படுகின்றது.
இலங்கை அரசியலில் இவ்வாறான விடயங்கள் பல்வேறுபட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தற்போது இந்த விடயம் பேசி பொருளாக மாற்றம் பெற்று இருக்கின்றது.
மஹிந்தாவுடைய ஆட்சி காலத்தில் வழங்கியவர் பல்வேறுபட்ட படுகொலைகளை புரிந்ததை அடுத்து அவர் தற்பொழுது சிறையில் வசித்து வருகின்றார்.
அவ்வாறான நிலையில் தற்போது இந்த அதிபருக்கு இவ்விதமான ஒரு நெருக்கடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
பொலிஸ் மா அதிபர் தேசப்பந்துக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையானது மக்கள் மத்தியில் இன்று பேசு பொருளாகவும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

















