பொலனறுவையில் கவிழ்ந்த பேரூந்து தப்பிய இசைக்குழு
Posted in இலங்கை செய்திகள்

பொலனறுவையில் கவிழ்ந்த பேரூந்து தப்பிய இசைக்குழு

பொலனறுவையில் கவிழ்ந்த பேரூந்து தப்பிய இசைக்குழு

பொலனறுவை ஓங்கம பகுதியில் இசை குழு பயணித்த பேரூந்து ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த ,இசை குழுவை சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளனர் .

பொலனறுவை பகுதியில் இசை நிகழ்ச்சியை நடத்தி விட்டு, வீடு திரும்பிய அதே இசைக்குழுவை சேர்ந்த சாரதி ஒருவரே பேரூந்தை செலுத்தி வந்துள்ளார் .

அதன் பொழுதே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேரூந்து விபத்தில் சிக்கி கவிழ்ந்துள்ளது .

பேரூந்து தலைகீழாக கவிழ்ந்த பொழுதும் அதில் பயணித்த இசை குழு உறுப்பினர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பித்துள்ளனர் .

மக்களை மகிழ்விக்க இசை நிகழ்ச்சி நடத்திய இசை குழு, பேரூந்து விபத்தில் சிக்கிய சம்பவம் ,அந்த இசை குழு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .