Tag: பிரபாஸ்
விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்…. நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்
விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்…. நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் பிரபாஸ். இவருக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. தற்போது ராதே ஷ்யாம், சலார், ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலமான நடிகர் ஆகிவிட்டதால் அவரின் மார்க்கெட்
பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் நடிகர் பிரபாஸை தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்க முயற்சித்துள்ளன.
பிரபாஸ்
கடந்த ஓராண்டில் நடிகர் பிரபாஸுக்கு காலணிகள், மின்னணு பொருட்கள், சோப்பு என ஏராளமான விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
இவற்றில் நடித்திருந்தால் அவருக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் கிடைத்திருக்குமாம். ஆனால் அவர் அவற்றில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
தனக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்துள்ளதால் குறிப்பிட்ட விளம்பரங்களில் தான் நடிக்க வேண்டும் என அவர் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது
4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும் பிரபாஸ்
4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும் பிரபாஸ்
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்கு சுமார் ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாம்.
அடுத்தடுத்து 4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும்
‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை
வாரிக்குவித்தது. இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்தவகையில் பிரபாஸின் 20-வது படத்தை, ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே கே
ராதா கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ‘ராதே ஷ்யாம்’ என பெயரிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிரபாஸின் 21-வது படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற ‘மகாநடி’ என்ற படத்தை
இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார். இதில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
பிரபாஸ்
பிரபாஸின் 22-வது படம் ஆதிபுருஷ். ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை ஓம் ராவத்
இயக்குகிறார். இதையடுத்து பிரபாஸின் 23-வது படத்தை கே.ஜி.எப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘சலார்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு படங்களின் பட்ஜெட்டை சேர்த்தால் சுமார் ரூ.1,000 கோடியைத் தாண்டுகிறது. இதற்கு முன்னர் இந்தியத் திரையுலகில்
ஒரே சமயத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்பட்ட நடிகர் வேறு யாருமில்லை என்று கூறப்படுகிறது.






