Tag: பிரதேசசபை
லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம்
லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம்
லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.Students in London fined £57,000 for skipping school
இவ்விதம் கடந்த 2022 முதல் 2023 ஆம் ஆண்டு கால பகுதியில் 14 ,100பவுண்டுகள் தண்டமாக அற விடப்பட்டுள்ளது.
அதேபோன்று 2023 ஆம் 20 24 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 14,340 பவுண்டுகள் அளவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லண்டன் பிரேதசசபை
இவை கிழக்கு லண்டன் பிரேதசசபை -கவுன்சில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்த ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.
பிள்ளைகளை பாடசாலைக்கு உரிய முறையில் அனுப்பி வைக்காது அவர்கள் அடிக்கடி லீவு எடுத்துக் கொண்டதும் உரிய காரணங்கள் கண்ணபிக்க தவறிய காரணத்தினால் இந்த தண்டம் அற விடப்பட்டுள்ளதாக அந்த ஊடக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
செய்திகள் என்பது அந்தப் பகுதியில் வாழும் தமிழர் மத்தியிலும் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள்
தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் .பிள்ளைகளை உரிய காரணங்கள் காட்டி பாடசாலை அனுப்பத் தவறினால்,இவ்வாறான தண்டத்தை அந்த பிரதேச சபை அறவிட்டு கொள்கிறது குறிப்பிடத்தக்கது.
- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

- ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும் அமெரிக்கா

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு
பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு
பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு ,வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்யும் கூட்டம், வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில் இன்று (20) நடைபெற்றது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 8 பேர், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பில் 5 பேர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் 4 பேர், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
பேர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) சார்பில் 2 பேர், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவர், மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் 2 பேர் என
மொத்தம் 28 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி
தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் கந்தையா யசீதன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க்
காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், தவிசாளர் தேர்வு பகிரங்க வாக்கெடுப்பு மூலமா அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலமா நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டார்.
இதன்போது, பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக 19 வாக்குகளும், இரகசிய வாக்கெடுப்புக்கு 9 வாக்குகளும் பதிவாகின.
பகிரங்க வாக்கெடுப்பில், கந்தையா யசீதன் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.டி.பி., மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் 13 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
நாகராசா பகீரதனுக்கு 9 வாக்குகள் கிடைத்தன. தேசிய மக்கள் சக்தி (6 வாக்குகள்) நடுநிலை வகித்தது.
இதேவேளை, உப தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் பேரின்பநாயகம் சுபாகர் மற்றும் சங்கு-சைக்கிள் கூட்டணியின்
சார்பில் தர்மகுலசிங்கம் உதயகுமார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பேரின்பநாயகம் சுபாகர் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன

- எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது சுகாதார அமைச்சு












