கருணைக்கிழங்கு பிரட்டல் கறி செய்யும் முறை
Posted in சமையல் சமையல் cook

கருணைக்கிழங்கு பிரட்டல் கறி செய்யும் முறை

கருணைக்கிழங்கு பிரட்டல் கறி செய்யும் முறை

கருணைக்கிழங்கு பிரட்டல் கறி செய்யும் முறை ,ஒரு துண்டு கருணைக்கிழங்கை தோள் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி இராண்டு முறை கழுவி எடுக்கவும்.

கழுவி எடுத்த கருணைக்கிழங்குள் சிறு உப்பு சேர்த்து நல்லா கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் சிரிது தேங்காய் எண்ணெய் ஊற்றவும், சூடான எண்ணெயில் வெட்டி வைத்த கருணைக்கிழங்கை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து சூடேற்றவும் .

எண்ணெய் சூடானதும் அதில் கறிவேப்பில்லை , காய்ந்தமிளகாய் , பெரிய சீரகம் , நறுக்கிய வெங்காயம் , உல்லி சேர்த்து பொன்னிரமா வரும் வரை விடவும் , அனைத்தும் வதங்கி பொன்னிறமானதும் சிறிது வெந்தயம் சேர்த்து நன்றாக வதக்கவும் .

பின் தேவையான அளவு தூள் சேர்த்து தூள் வெக்கை போகும் வரை வதக்கவும் பின் கரைத்து வைத்த புளி , தேங்காய் பால் , தேவையான அளவு உப்பு சேர்த்து 3-4 நிமிடம் மூடி கொதிக்கவிடவும்.

பின்னர் அதில் பொரித்து வைத்த கருணைக்கிழங்கை போட்டு மீண்டும் 3-4 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் அதை அடுப்பில் இருந்து இறக்கவும் சுவையான கருணைக்கிழங்கு பிரட்டல் ரெடி .

வீடியோ