Tag: பாலங்கள்
247கிமீ சாலைகள் 40பாலங்கள் சேதம்
247கிமீ சாலைகள் 40பாலங்கள் சேதம்
247கிமீ சாலைகள் 40பாலங்கள் சேதம் சேதமடைந்துள்ளன: ஜனாதிபதி விரைவான பழுதுபார்ப்புகளுக்கு அழைப்பு.
தித்வா சூறாவளிக்குப் பிறகு
தித்வா சூறாவளிக்குப் பிறகு இயல்புநிலையை மீட்டெடுக்கவும், தடையற்ற போக்குவரத்து சேவைகளை உறுதி செய்யவும் சேதமடைந்த
சாலை உள்கட்டமைப்பை சரிசெய்வதற்கு அவசர முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி
செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நிலச்சரிவுகள், வெள்ளம் மற்றும் நீர் மட்ட உயர்வு
நிலச்சரிவுகள், வெள்ளம் மற்றும் நீர் மட்ட உயர்வு ஆகியவற்றால் நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்ட பரவலான சேதம்
மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு தேவையான நிதி மற்றும் காலக்கெடு குறித்து இந்த விவாதம் கவனம் செலுத்தியது.
நாடு முழுவதும் சுமார் 247 கி.மீ A- மற்றும் B-தர சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், 40 பாலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட 256 சாலைப் பிரிவுகளில் 175 இப்போது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அவசர நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கும், சமூகங்கள் அன்றாட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கும் முக்கியமான
போக்குவரத்து பாதைகளில் பழுதுபார்ப்புகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி திசாநாயக்க வலியுறுத்தினார்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு
ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளோம். 16,000 மில்லியன் செலவில் 162 பாலங்கள் நிர்மாணிக்கப்படும் என்று கூறினோம்.
ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு
அந்தப் பாலங்களில் ஒரு பகுதியை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம். இதன்படி 162 பாலங்களும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் மக்களிடம் கையளிக்கப்படும்.
அத்துடன், சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா திட்டமும் ஓகஸ்ட் மாத இறுதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
மேலும், 29,000 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும். இன்னும் 2600 உத்தியோகத்தர்கள் எஞ்சியுள்ளனர். அவர்களை வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
இந்த ஆண்டில் ஓய்வு பெறுபவர்களுக்குப் பதிலாக PL 1-2 பிரிவுகளுக்கு மேலதிகமாக உள்ள ஊழியர்களை பணியமர்த்த அனுமதி அளித்துள்ளோம்.
மேலும் அனைத்து அமைச்சுக்களின் கீழும் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம். நாடு நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது. இது அனைத்து துறைகளிலும் எடுத்துக் காட்டப்படுகிறது.
நாட்டை மீண்டும் கடந்த காலங்களில் இருந்த நிலைக்கு பின்னோக்கிக் கொண்டு செல்ல சிலர் முயற்சிக்கின்றனர். இப்படி இடையூறு செய்பவர்களுக்கு எதிராக தரா தரம் பாராமல் சட்டத்தை செயல்படுத்துவோம் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மேலும் தெரிவித்தார்.









