Tag: பாதாள உலகக் குழு
பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் கொலை
பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் கொலை
பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் கொலை தொடர்பாக சிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ளது
கொழும்பு குற்றப்பிரிவின்
கொழும்பு குற்றப்பிரிவின் (சிசிடி) காவலில் இருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள
உலகக் கும்பல் தலைவர் மாகந்துரே மதுஷ் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சம்பவம் நடந்த நாளில் மதுஷை மாளிகாவத்தைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று சிஐடி தெரிவித்துள்ளது.
அக்டோபர் 20, 2020 அன்று மாளிகாவத்தையில் அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது மதுஷ் கொல்லப்பட்டார்.
அந்த நேரத்தில், போதைப்பொருள் இருப்பு பற்றிய தகவல்களை அவர் வழங்கியதாகக் கூறப்பட்டதை அடுத்து, கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் அவரை அங்கு அழைத்துச் சென்றனர்.
புதிய விசாரணைக்கான கோரிக்கை
புதிய விசாரணைக்கான கோரிக்கையை மதுஷின் சகோதரர்களில் ஒருவர் முன்வைத்தார், அவர் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முறையீடு செய்தார்.
கோரிக்கையைத் தொடர்ந்து, இலங்கை காவல்துறை இந்த விஷயத்தை மேலும் விசாரணைக்காக சிஐடிக்கு அனுப்பியது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு உண்மைகளைப் புகாரளித்த பின்னர், நீதித்துறை மருத்துவ அதிகாரியிடமிருந்து வாக்குமூலம் பெறவும், துப்பாக்கிச்
சூடு தொடர்பான வீடியோ காட்சிகளை விசாரணையின் ஒரு பகுதியாக ஊடக நிறுவனங்களிலிருந்து சேகரிக்கவும் நீதவான் உத்தரவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்
இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள்
இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக்குழு தலைவர்கள்
இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள் ,இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், இலங்கையின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின்
தலைவர்களாகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குழு தலைவர்கள்,
இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் விசேட குழுவால்
இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் விசேட குழுவால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.
பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி ஹிரு ஆகியோர் இதன்போது கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் இருந்த பெக்கோ சமனின் மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும், மூன்று வயது குழந்தை பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தின் கூண்டில் பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவா
என்ற சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கெஹல்பத்தர பத்மே மீது குற்றம் சாட்டப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்
விசாரணையில் குற்ற கும்பலைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவாவை கொலை செய்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியிருந்தார்.
மேலும், கெஹெல்பத்தர பத்மே உள்ளிட் இந்தக் குழு மீது பல்வேறு குற்றச் செயல்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற பின்னணியில், கெஹெல்பத்தர பத்மேவுக்கு நெருக்கமான பாதாள உலகக் குழு கும்பல்களைச் சேர்ந்த பலர் கடந்த காலங்களில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி, கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ‘பஸ் தேவா’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் வலையமைப்பு சிக்கியது
அவரிடம் முன்னெடுத்த விசாரணைக்கு அமைய, கெஹெல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பை நாட்டில் நடத்தி வரும் வலஸ் கட்டா என்ற
திலின சம்பத்தும் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு, கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கஜ்ஜா என்ற அனுர
விதானகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததற்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.










