தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு

தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு

திருகோணமலை – புல்மோட்டை கமநல சேவை நிலையத்தில் ஆண்டாங்குள விவசாயிகளுக்கென களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பசளைகளை பிரிதொரு பிரதேசத்துக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்த செயற்பாட்டை குச்சவெளி

பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்தி பசளைகளை ஆண்டாங்குள விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.

புல்மோட்டை கமநல சேவை நிலையத்தினால் இந்த விடயம் முன்னெடுக்கப்படுவதை அறிந்து கொண்ட ஆண்டாங்குள விவசாயிகள்

தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு
தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு

குறித்த விடயத்தை குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கமநல திணைக்கள ஆணையாளரை தொடர்பு கொண்டு

ஆண்டங்குள விவசாயிகளின் நிலமையை தெளிவுபடுத்திய பின்னர் மாவட்ட கமநல உதவி ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாக ஆண்டாங்குள

விவசாயிகளுக்கு உரிய பசளைகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனை முன்னெடுத்த தவிசாளருக்கு ஆண்டாங்குள விவசாயிகள் நன்றிகளைத் தெரிவித்தனர்.

பைஷல் இஸ்மாயில் –