தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடி இல்லை
Posted in இலங்கை செய்திகள்

தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடி இல்லை

தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடி இல்லை

தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடி இல்லை

தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் எந்தவித நெருக்கடியும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர், தேசிய பட்டியல் நியமனம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய பட்டியலுக்காக தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் மிகவும் பொருத்தமானவர்கள்.

நாட்டை கட்டியெழுப்புவதில் அவர்கள் அனைவருக்கும் பெரும் பொறுப்பு இருக்க வேண்டும். இந்த பட்டியலில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் உள்ளனர்.

வீழ்ச்சி கண்டுள்ள நாட்டையும் 220 லட்சம் மக்களையும் மீட்டெடுப்பதே எனது எண்ணப்பாடாக இருக்கிறது என்றார்

தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம்
Posted in இலங்கை செய்திகள்

தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம்

தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம்

தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம் ,தேசியப் பட்டியலில் இருந்து 10ஆவது பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர்களை சில கட்சிகள் இன்னும் அனுப்பவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, சில கட்சிகள் வழங்கிய பெயர்களை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தொகுதி மட்டத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி

அறிவித்தலை வெளியிடுவதற்கு உரிய பெயர்கள் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களைத் தவிர வேறு நபர்களை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்க முடியாது எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.