Tag: திருவிழா
நல்லூர் திருவிழாவில் நகைதிருடிய இளம்யுவதி கைது
நல்லூர் திருவிழாவில் நகைதிருடிய இளம்யுவதி கைது
நல்லூர் திருவிழாவில் நகைதிருடிய இளம்யுவதி கைது ,நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி
ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று (21) நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது, குறித்த யுவதி பக்தர்களிடையே
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடியதை சாரணர்கள் அவதானித்து, அவரைத் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.
சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, சாரணர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்
இதன்போது, யுவதி ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, சாரணர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸார் அவரைச் சோதனையிட்டபோது, அவரது உடைமைகளில் இருந்து மூன்று தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டன.
விசாரணையில், குறித்த யுவதி கொச்சிக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவருடன் மேலும் சிலர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவருடன் வந்த ஏனைய நபர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கையும் களவுமாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்
யுவதியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து, அவரைக் கையும் களவுமாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கு பொலிஸார் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்த் திருவிழாவின் போது தமது தங்க நகைகள் திருடப்பட்டதாக 08 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்
கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதேவேளை, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்காத நிலையில் இந்திய யாத்திரிகர்கள் எவரும் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்கமாட்டார்கள் என்று இராமேஸ்வரம் – வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு நேற்றுமுன்தினம் எழுத்தில் அறிவித்திருந்தார்
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டாம் என கோரிக்கை
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டாம் என கோரிக்கை
கச்சத்தீவு திருவிழாவில் இம்முறை இந்தியாவில் இருந்து பக்தர்கள் எவரும் பங்கேற்க வேண்டாம் என கச்சத்தீவு திருப்பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை இந்திய பக்தர்களின் உறவு பாலமாக உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், சிறையில் உள்ள நான்கு இந்திய மீனவர்களை
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டாம் என கோரிக்கை
விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.
அதனடிப்படையில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக படகுகள் இயக்கப்படாததால் இந்த ஆண்டு திருப்பயணத்தை ரத்து செய்வதாக கச்சத்தீவு திருப்பயன ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அந்த செய்தியில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய திருப்பயணிகள் தயவு செய்து கச்சதீவுக்கு பயணிக்க வேண்டாம் எனவும், அவர்கள் கொடுத்த பணத்தை விரைவில் திருப்பிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லண்டன் லூசியம் சிவன் ஆலய தேர் திருவிழா video
லண்டன் லூசியம் சிவன் ஆலய தேர் திருவிழா video
லண்டன் லூசியம் பகுதியில் அமைய பெற்றுள்ள ,
சிவன் ஆலயத்தின் தேர் திருவிழா இடம்பெற்றது.
பல்லாயிர கணக்கில் மக்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றினர் .
பால்குடம் ,கற்பூர சட்டி ,காவடி ,உள்ளிட்ட வேண்டுதல்க நிகழ்வுகளும் இடம்பெற்றன .
கடந்த இரண்டு வருடங்களாக திருவிழா இடம்பெறாத நிலை காணப்பட்டது .
கொரனோ மற்றும் பிரிட்டன் இளவரசி அவர்கள் மரணமடைந்த நிலையில் ,தேர் திருவிழா இடம் பெறவில்லை .
ஆனால் இந்த வருடம் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது ,மக்கள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர் .
விரைவில் காணொளி பதிவேற்றம் செய்யப்படும் அதுவரை காத்திருங்கள் .
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு
by நிருபர் காவலன் - 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை
by நிருபர் காவலன் - நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்
by நிருபர் காவலன் - மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது
by நிருபர் காவலன் - போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்
by நிருபர் காவலன்
புஸ்ஸல்லாவ , புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் photo
புஸ்ஸல்லாவ , புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் photo
புஸ்ஸல்லாவ சிவபுரத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன்(தாயுமானவர்) ஆலயத்தில் தொடர்ந்து 48 நாட்கள்
நடைபெற்ற மண்டலாபிஷேகத்தை தொடர்ந்துபால்குட பவனியும் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் நேற்று (25) நடைபெற்றது.
இந்த தெய்வீகநிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள். புஸ்ஸல்லாவ சிவபுரத்தில்
புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன்(தாயுமானவர்) ஆலயத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்ற மண்டலாபிஷேகத்தை
தொடர்ந்துபால்குட பவனியும் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் நேற்று (25) நடைபெற்றது. இந்த தெய்வீகநிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்











