நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்
Posted in இலங்கை செய்திகள்

நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்

நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்

நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) உள்ளிட்ட

குழுவினர் இன்று (10) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி

அமரசூராய ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.

அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் பரஸ்பர

அனுகூலங்களை வழங்கும் தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது

மேலும், சமந்தா ஜோய் மோஸ்டின், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதோடு பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகமவில்

அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களை

அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களைப் பார்வையிட்டார்.

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை வழியனுப்பும் நிகழ்வில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன

மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குழுவும் இணைந்து கொண்டனர்.

காணாமல் போன மாணவன் 10 நாட்களின் பின்னர் திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன மாணவன் 10 நாட்களின் பின்னர் திரும்பினார்

காணாமல் போன் மாணவன் 10 நாட்களின் பின்னர் திரும்பினார்

இலங்கை கண்டு பேராதனை பல்கலைக் கழக்தில் கல்வி , பயின்று வந்த மாணவர் ஒருவர் அங்கிருந்து ,காணாமல் போனார் .

காணாமல் போகும் முன்னர், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு காணாமல் போயிருந்தார் .

தற்போது 10 நாட்களின் பின்னர் ,அதே பல்கலை கழகத்திற்கு மீளவும் திரும்பி வந்துள்ளார் என்கிறது ,அந்த கல்லூரி நிர்வாகம் .