அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி
Posted in இலங்கை செய்திகள்

அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி

அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி

அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி ,இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

மழையுடன் மின்னல்

நேற்று மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெல்காலயாய , இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணை

சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மின்னல் தாக்குதல் காரணமாக அண்ணன் தங்கை பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

கோடைகாலத்தில் ஏற்பட்ட கலாநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட இயற்கையின் தாக்குதலில் சிக்கி அண்ணன் .தங்கை .பலியான சம்பவம் நாடளாவிய ரீதியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த தினம் முல்லைத்தீவு பகுதியிலும் இடி தாக்குத்தலில் சிக்கி முன்னாள் போராளி ஒருவர் பலியாகி இருந்தார் .

அதனை அடுத்து தற்போது மின்னல் தாக்கி அண்ணன் தங்கை பலியாகியுள்ளனர் .

Featured

Loading...