Tag: தமிழரசுக் கட்சி
தமிழரசுக் கட்சியை சிதைக்க சதி
தமிழரசுக் கட்சியை சிதைக்க சதி
தமிழரசுக் கட்சியை சிதைக்க சதி ,தமிழரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்படுகிறது. அதிலும் தமிழரசுக் கட்சியை எப்படியாது சிதைத்து அதை உடைத்து கட்சியை பிளவு படுத்தி விட வேண்டும் என சிலர்
செயற்படுகின்றனர். என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை (13) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்து பேசப்படுகிறது. உண்மையில் அப்படி கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை. அப்படியான
எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தொடர்பில் பேசியிருந்த போது அவர்கள் அனைவரும் இதனை மறுதலித்துள்ளனர்.
குறிப்பாக தமிழ் மக்களின் நீண்ட கால பாரம்பரிய கட்சியாக இருக்கிறது. இந்த தமிழரசுக் கட்சியை எப்படியாவது உடைத்து விட வேண்டும் என்ற விசமத்தனமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது.
தமிழரசுக் கட்சியை பொறுத்த வரையில் கடந்த 75 வருடகால வரலாற்றில் சோரம் போகாத ஊழலில் ஈடுபடாத தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாக இந்தக் கட்சியே திகழ்ந்து வருகிறது.
இத்தகைய கட்சியை உடைக்க பலரும் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்திருந்தாலும் இது பலனளிக்காத நிலைமை ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறான நிலையில் ஜனநாயக தமிழரசு என்றும் புதிய தமிழரசு என்றும் புதிய புதிய பெயர்களைச் சொல்லிக் கொள்கின்றனர். அவ்வாறாக தமிழரசு
கட்சியை உடைப்பவர்களுக்கு தமிழரசு என்ற சொல்லும் தேவைப்படுவது ஆச்சர்யமானது.
ஆக மொத்தத்தில் தமிழரசை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. ஆனால் தெற்கத்தேயே சிங்கள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உடைக்கும்
முயற்சியை தொடர்ந்து செய்தாலும் இது பலனளிக்காது என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன்.
மேலும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவராக நானும் பதில் செயலாளராக சுமந்திரனும் பதவிக்கு வருவதற்கு புதிதாக ஒன்றும் செய்யவில்லை. யாப்பில்
குளறுபடி செய்து இந்தப் பதவிகளுக்கு வரவில்லை. எமது கட்சியின் யாப்பிற்கு அமையதான் இப்போது அந்தப் பதவிகளை எடுத்திருக்கிறோம்.
இவ்வாறான நிலைமைகள் இருக்கத்தக்கதாக மக்கள் மத்தியில் பிழையான தகவல்களை பரப்பி விசமத்தனமான பிரச்சாரங்களை சிலர்
மேற்கொள்கின்றனர். அதுவும் இப்போது தேர்தல் காலம் என்பதால் இன்னும் இன்னும் அதிகளவில் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.
எனவே தமிழரசை பிளவுபடுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பொய்ப் பிரச்சாரங்களை சரியான முறையில் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழரசை இலக்கு வைத்து தமிழரசை உடைக்க முயற்சிகள் எடுத்தாலும் அதனூடாக விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நாம் முன்னேறுவோம்.
மாற்றான சிந்தனையில் பொறுப்பான அணுகு முறையை பின்பற்றி அனேகமாக எல்லா இடங்களிலும் சபைகளை கைப்பற்றுவோம். ஆனால் ஆட்சி அமைக்க தேவைப்படும் இடங்களில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் பேசுவோம் என்றார்.
தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டி
தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டி
தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டி ,தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே
போட்டியிடுகின்றது எனவும் எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
என தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களின் கலந்துரையாடல் அம்பாறை மாவட்டம்
ஆலையடிவேம்பு பகுதியில் சனிக்கிழமை(08) இரவு பொத்துவில் தொகுதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.கோடீஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளருமான எம். ஏ. சுமந்திரன் கல்முனைத் தொகுதி தலைவர் அ.நிதான்சன் சம்மாந்துறை
தொகுதியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான த.கலையரசன் மற்றும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களும் கலந்து கொண்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.
இதன்போது இக்கூட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளும் கைப்பற்றப்படல் வேண்டும் பெண்கள் பிரதிநிதித்துவம்
இளைஞர்களுக்கு தேர்தலில் பங்கேற்க வாய்ப்பு வழங்குதல் உட்பட இலங்கை தமிழரசுக் கட்சியானது இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது
தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு
தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு
தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு ,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்,
2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து,
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10 ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை சுமந்திரன் விளையாட்டு
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை சுமந்திரன் விளையாட்டு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இன்று மதியம் தடையுத்தரவு விதித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றமும் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த தடைகளுக்கு காரணம் வேறு யாரும் அல்ல சுமந்திரன் பின்புல மூளை என மக்கள் மன்றில் கருத்துக்கள் உலாவி வருகின்றன .
தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் வீட்டில் நடந்தது என்ன
தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் வீட்டில் நடந்தது என்ன
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ். குலநாயகம் வீட்டில் நேற்று (12) மாலை திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள வீட்டிலேயே குறித்த திருட்டு சம்பவம் பதிவானது.
தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் வீட்டில் நடந்தது என்ன
வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த சமயத்தில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் சிறிய தொகைப் பணமும் இதன் போது திருடிச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி கண்காணிப்பு கமராவின் காணொளியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
by நிருபர் காவலன் - பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
by நிருபர் காவலன் - தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்
by நிருபர் காவலன் - பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்
by நிருபர் காவலன்












