Tag: தப்பிய மக்கள்
முறிந்த மரம் தப்பிய மக்கள்
முறிந்த மரம் தப்பிய மக்கள்
பெய்து வரும் அடை மழையுடன், பெரகல – வெள்ளவாய ஏ4 வீதிக்கு கீழே பிளாக்வுட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) காலை பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலை 8 மணியளவில் வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பலர் 99இல் தப்பியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முறிந்த மரம் தப்பிய மக்கள்
வீதியில் பாறைகள் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் பகுதி நூறு அடிக்கு மேல் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டாரவளை- எல்ல -வெல்லவாய வீதி மாற்று வீதியாக பயன்படுத்துமாறு மண்சரிவு அபாயம் உள்ளதால் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மாற்றுப் வீதியாக ஹலத்துதென்ன கிராவணகம நிகபோத ஊடாக வெல்லவாய செல்லும் குறுகிய வீதியையும் பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை
- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது
- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது
- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்
வீட்டுக்குள் புகுந்த புலி தப்பிய மக்கள் video
வீட்டுக்குள் புகுந்த புலி தப்பிய மக்கள் video
இந்தியா மகாராஷ்டாவில் வீட்டுக்குள் பூனை போல புகுந்த புலியினால் ,பெரும் பர பரப்பு ஏற்பட்டது .எனினும் புலி வீட்டுக்குள் புகுந்த போதிலும் மக்கள் தப்பித்து கொன்றனர்.
வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த சிறுத்தை புலியினை ,வீட்டின் உரிமையாளர் கூலாக காணொளி பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் .
வீட்டுக்குள் புகுந்த புலியின் காணொளி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வண்ணம் உள்ளது .
கடவுள் சித்தமாக மக்கள் தப்பித்தார் .
அந்த காட்சிகளை இப்பொழுது இங்கே நீங்கள் காணலாம்.
கவிழ்ந்த வான் தப்பிய மக்கள் காட்சிகள் உள்ளே
கவிழ்ந்த வான் தப்பிய மக்கள் காட்சிகள் உள்ளே
கொழும்பில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த வானொன்று, கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில் செனன் பிரதேசத்தில் வைத்து வீதியிலேயே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
எனினும், அதில் பயணித்த ஐவரும் எவ்விதமான பாதிப்புகளும் இன்றி தப்பியுள்ளனர்.
இவ்வனர்த்தம் இன்று (25) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அந்த வானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக வேகத்தில் பயணித்த போது, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால், வாகனத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரமுடியாமல் போயுள்ளது என்பது
விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஹட்டன் பொலிஸார், சம்பவத்தில் யாருக்கும் எவ்விதமான காயங்களும்
ஏற்படவில்லை எனினும், வாகனத்துக்கு கடுமையான சேதம் ஏற்பட்டள்ளது என்றனர்.






















