Tag: தண்ணீர்
தண்ணி விற்பனை 5 லட்சம் ரூபா அபராதம்
தண்ணி விற்பனை 5 லட்சம் ரூபா அபராதம்
தண்ணீர் போத்தல் ஒன்றுக்கு 10 இலாபம் வைத்து விற்றவருக்கு ஐந்து இலட்சம் ரூபா பராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி – கலவானை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
70 ரூபாய் விலையை கொண்ட 500 மில்லி லிட்டர் குடிநீர் போத்தலை 80 ரூபாய்க்கு விற்றதற்காக கலவானை நீதிவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்) நிர்வாகம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கொழும்பு தாமரை கோபுரத்தின் தரை தளத்தில் உள்ள கடை உரிமையாளருக்கு, அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றதற்காக கொழும்பு மேலதிக நீதிவான் 100,000 ருபாய் அபராதம் விதித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவு நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர், MRP விதிமுறைகளை மீறி, 80 ருபாயான 500 மில்லி குடிநீர் பாட்டிலை 150 ருபாய்க்கு விற்றதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதுபோன்ற அதிக விலை நிர்ணய சம்பவங்கள் குறித்து முறையிடுமாறு நுகர்வோர் விவகார ஆணையகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
அதிகமாக தண்ணீர் பருகுமாறு அறிவுறுத்தல்
அதிகமாக தண்ணீர் பருகுமாறு அறிவுறுத்தல்
அதிகமாக தண்ணீர் பருகுமாறு அறிவுறுத்தல் ,இந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவும் என்பதால், கவனம் செலுத்துமாறும் அதிகளவில் தண்ணீரை பருகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்த உயர் வெப்பநிலை அதிகமாக இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித உடலை நீண்ட நேரம் வெப்பத்தில் வெளிப்படுத்துவது நீரிழப்பு, தசைச் சிதைவு, அதிகப்படியான சோர்வு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் என்றும், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுபோன்ற கடுமையான வெப்பநிலை தொடர்ந்தால், பொதுமக்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும், கடுமையான செயல்பாடுகளை குறைக்கவும், நிழலான பகுதிகளில் தங்கவும் திணைக்களம் அறிவுறுத்துகிறது.
தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி கிணற்றில் விழுந்து பலி
தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி கிணற்றில் விழுந்து பலி
மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விருதொடே, மதுரங்குளி பகுதியில் வசித்து வந்த 06 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி நேற்று (15) காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் வாளி ஒன்றின் உதவியுடன் தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க
சாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க
பலருக்கு தண்ணீர் குடிப்பதிலும் சந்தேகங்கள் எழும். உதாரணமாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது சரியா என்று தோன்றும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நாம் மேற்கொள்ளும் உணவுப் பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம்
எடுத்துக்கொள்ளும் உணவுகளில் அனைத்து வகையான சத்துகளும் சீராக இருப்பதுபோல அமைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
குழந்தைகளுக்கு எனில், அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உணவுகளை சமைக்க வேண்டும். முதியவர்கள் எனில், அவர்களின்
செரிமானம் மற்றும் தேவைப்படும் சத்துகள் உள்ள உணவுகள் தயார் செய்து தர வேண்டும்.
என்ன வகையான உணவு உணவு சாப்பிட்டாலும், தண்ணீர் குடிப்பது தவிர்க்க முடியாதது. பலர் ஏசி அறைகளில் வேலைப் பார்ப்பதால்
தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கின்றனர். எப்போதாவது தோன்றும்போது தண்ணீர் குடிக்கின்றனர். இது சரியான பழக்கம் அல்ல.
இயல்பான மனிதர் ஒருவர் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். பலர் வேலை மும்முரத்தில் தண்ணீர் குடிப்பதை மறந்துவிடுகின்றனர். பெண்கள் வெளியில்
செல்லும்போது கழிவறை தேடி அலைய முடியாது என தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. சராசரி உடலில் தண்ணீரின் அளவு சீராக இருக்க வேண்டும்.
பலருக்கு தண்ணீர் குடிப்பதிலும் சந்தேகங்கள் எழும். உதாரணமாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது சரியா என்று தோன்றும்.
பெரும்பாலான மருத்துவர்கள் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க சொல்கிறார்கள். அப்படிக் குடிக்கும்பட்சத்தில் உணவின் அளவு குறைந்துவிடும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் சிலர் அதிகம் சாப்பிட்டு விடக்கூடாது என்பதாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர்
குடிப்பார்கள். ஆனாலும் இதை ஒரு மருத்துவரின் அறிவுரை கேட்டபிறகே முடிவெடுக்க வேண்டும். தானாக இந்தப் பயிற்சியை மேற்கொள்ள கூடாது.
அதேபோல, சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கலாமா என்ற கேள்வியும் பலருக்கு உண்டு. இதையும் தவிர்க்கவே மருத்துவர்கள்
கூறுகிறார்கள். அப்படிக் குடித்தால் செரிமான பிரச்னைகள் ஏற்படும்.
உணவை உமிழ்நீரோடு நன்கு மென்று சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் தேவை வராது. அதற்காக விக்கிக்கொண்டிருக்க
வேண்டியதில்லை. அப்படியான நேரங்களில் மிகக் குறைவான அளவு தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.
அதேபோல சாப்பிட்டு முடித்தவுடனே கடகட என்று தண்ணீரைக் குடிக்காது, 15 – 20 நிமிடங்கள் கழித்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்வது நல்லது.
அதாவது சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பும், சாப்பிட்ட பிறகு அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.
மற்ற நேரங்களில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் தண்ணீர் குடிப்பதைப் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வேலை நேரத்தில் எழுந்து செல்ல முடியாது என்பவர்கள்.
ஒரு பாட்டிலில் தண்ணீரை அருகில் வைத்துக்கொள்வது நல்லது. அது பிளாஸ்டிக் பாட்டிலாக இல்லாமல் எவர்சில்வர் பாட்டிலாக இருப்பது நல்லது.
முடிந்தளவு உடலில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் குடிப்பது என்கிற நிலைமைக்கு கொண்டு செல்லாதீர்கள். போதுமான அளவு
தண்ணீர் குடிக்காவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக் கல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
குடிப்பது நல்ல தண்ணீராக என்று செக் பண்ணிக்கொள்வது நல்லது. சில இடங்களில் தண்ணீர் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறங்களில் வரக்கூடும்.
அவர்கள் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை வாங்கிக்கொள்வது நல்லது. அக்கருவி வடிகட்டி சுத்தப்படுத்தி தரும் நீரைக் குடிக்கலாம்.
சிலருக்கு மருத்துவர்கள் தண்ணீர் குடிப்பதில் சில வழிகாட்டல்களைச் சொல்லியிருப்பார்கள். அவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் அறிவுரைப்படி நடப்பதே நல்லது.















