Tag: தங்க நகை
16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது
16பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது
16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது ,மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த 18 வயதான இளைஞன் ஒருவரை தங்கவைத்து தங்களது
பிள்ளையப் போல் வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை
அத்துடன், திருட்டுக்கு உடந்தையாக இருந்த இளைஞனின் நண்பனையும் திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தாய் தந்தையை இழந்த நிலையில், அவரை அவரது உறவினர்கள் தமது வீட்டில் வைத்து ஆதரித்து படிக்கவைத்து பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில், தமது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் உறவினார்கள்
முறைப்பாடு செய்ததற்கு அமைய முன்னெடுத்த விசாரணையில் குறித்த இளைஞனே அதனை திருடியுள்ளதை பொலிஸார் கண்டறிந்தனர்.
தங்க ஆபரண விற்பனை நிலையம்
இதனையடுத்து குறித்த இளைஞனையும் அவரது நண்பனையும் திருடிய தங்க நகைகளை சட்டவிரோதமாக வாங்கிய காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த இளைஞன் வீட்டில் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 16 பவுண்கள் கொண்ட 8 தங்க காப்புக்களை திருடி எடுத்துக் கொண்டு சென்று நண்பனுடன் சேர்ந்து அதனை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நகைகடை
ஒன்றில் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு அதில் 6 இலச்சம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றையும், ஸ்மாட் ரக கையடக்க தொலைபேசி ஒன்றையும் வாங்கியதுடன்,
ஏனைய பணத்தில் உடைகளை வாங்கியுள்ள அதேநேரத்தில், உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
தங்க நகைகளுடன் நபர் கைது
தங்க நகைகளுடன் நபர் கைது
விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் நபர் கைது, இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணித்த பயணி ஒருவர் அணிந்து வந்திருந்த தங்க நகையால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
47 வயதுடைய நபர் ஒருவர் பண்டாரநாயக்கா விமான நிலையத்தை பயன்படுத்தி பயணிக்க முயன்றார் அதன் பொழுதே அவர் அணிந்து வந்திருந்த 24 கேரட் எடையுள்ள 995 கிராம் இடையுள்ள தங்க நகையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகையினுடைய இன்றைய இலங்கை ரூபாய் 2 கோடிகள் வருமென தெரிவிக்கப்படுகின்றது .
வெளிநாடுகளில் வசிக்கின்ற தமிழர்கள் இருபது முதல் 100 வரையிலான பவுன்கள் கொண்ட நகைகள் சங்கிலிகளை அவர்கள் அணிந்து வருவது வழமையான ஒன்று .
2 கோடி ரூபா நகை அணிந்தவர் சிக்கினார்
அவ்வாறான நகைகளை அணிந்து தமது தாய் நாடான இலங்கைக்கு செல்கின்ற பொழுதும் இவ்வாறு கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள்
வெளிநாட்டு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை வாழ் மக்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்கை நகை கடத்தலில் இவர்கள் ஈடுபட்டார்கள் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே இது
வெளிநாட்டிலிருந்து இலங்கை நோக்கி பயணிக்கும் பயணிகள் மத்தியில் ஒருவித சலசலப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தும்.
மக்களுக்கு புதிய எச்சரிக்கை
ஒரு சம்பவமாக காணப்படுவதாக மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
2 கோடி ரூபாய் தங்க நகைகளை அணிந்து இவர் சென்றுள்ள பொழுதும் அவருக்கு எப்படி எங்கிருந்து இந்த பணம் கிடைத்தது என்பதும் எவ்வாறு இந்த
நகைகளை செய்தார் என்கின்ற விடயம் தொடர்பாக விசாரணைகளை போலீசார் நடத்துவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படியோ பண்டாரநாயக்காவின் ஊடாக அதிக விலை மதிப்பு கொண்ட நகைகளை அணிந்து சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் .
எதிர்காலத்தில் இவ்வாறு நகைகளை அணிந்து இலங்கை வந்தால் ,உங்களுக்கும் இதே நிலைதான் நடக்கும் என்பதான ,சம்பவ செய்தி ஒன்று இந்த சம்பவத்தின் ஊடாக தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் ஆயுதங்கள், தங்க நகைகளை தேடி அகழ்வு
புலிகளின் ஆயுதங்கள், தங்க நகைகளை தேடி அகழ்வு
விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள், தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
புலிகளின் ஆயுதங்கள், தங்க நகைகளை தேடி அகழ்வு
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று (25) பிற்பகல் 2.30 மணியளவில் அகழ்வு பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் அகழ்வு பணி நடைபெற்று வருகின்றது.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சுby நிருபர் காவலன்
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானைby நிருபர் காவலன்
- குற்றவாளிக்கு மரண தண்டனைby நிருபர் காவலன்
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்by நிருபர் காவலன்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்குby நிருபர் காவலன்
தங்க நகைகளை திருடிய இந்திய பிரஜை உட்பட 9 பேர் கைது
தங்க நகைகளை திருடிய இந்திய பிரஜை உட்பட 9 பேர் கைது
நுவரெலியா, புடலு ஓயா கீழ் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட மூன்று பெண்களின் தங்க நகைகளை திருடிய சந்தேகத்தின் பேரில் இந்திய பெண் ஒருவர் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக புடலு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கோவிலுக்கு வந்த பெண் ஒருவர் அணிந்திருந்த 850,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்க நெக்லஸ்கள் மற்றுமொரு பெண்ணின் கழுத்தில் இருந்த 16,57,500 ரூபாய் மதிப்புள்ள நகையும், மற்றைய பெண் அணிந்திருந்த 510,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகையும் திருடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இந்தியப் பெண்ணொருவரும் இந்திய ஆணும் அடங்குவதுடன் ஏனைய சந்தேக நபர்கள் புத்தளம், திகன, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 35, 55, 47, 39, 47 மற்றும் 29 வயதுடையவர்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை புடலுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
















