களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்

களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்

கிளிநொச்சி-பூநகரி சாமிப்புலம் கிராமத்தில் களவாக மணலுடன் சென்ற டிப்பரை விசேட அதிரடிப் படையினர் மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் புதன்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

பிடிக்கப்பட்ட டிப்பரை மணலுடன் பூநகரி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், பூநகரி பிரதேசத்தில் தொடர்ச்சியாக மணல், மரக்கடத்தல்கள் இடம் பெறுவதன் காரணமாக அதனை தடுக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Posted in Uncategorized

இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்

இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்

இலங்கை இயக்கச்சி பகுதியில்15-12-2021 வீதியின் ஓரத்தில் மிதிவண்டியுடன் நின்றவரை

வேகமாக வந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதி ,தள்ளியது இதன் பொழுது இயக்கச்சி

சங்கத்தார் வயலை சேர்ந்தவரும் , தற்போது உசனில் வசித்து வருபவருமான செல்லத்தம்பி-

செல்வகுமார் என அழைக்க படும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இந்த விபத்தில் சிக்கினார்

பலத்த காயமான நிலையில் தற்பொழுது யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையில் அவசர

சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் ,இதுவரை அவர் கண் விழிக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

சாரதி பளை காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இலங்கை

வீதி நடை முறைகளை பின்பற்ற தவறி சாரதிகள் வேகமாக பயணிப்பதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது