கொழும்பில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி

கொழும்பில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி

கொழும்பில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி ,கொழும்பு கிரண்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தினம் மாலை வேளையில் ஒருவர் உள்ளிட்ட இருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .

இந்த் துப்பாக்கிசூட்டு தாக்குதலில் பெண் சம்பவ இடத்தில் பல காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் ,ஏனைய நகரும் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீது ஏன் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றது என்பது தொடர்பில் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணைகளை ஆரம்பித்த வருகின்றனர்.

இலங்கையில் நாள்தோறும் துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரங்கள் மற்றும் படுகொலை சம்பவங்கள் என்பன அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் ,தற்பொழுது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்போது அதிகரித்த காணப்படும் இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சமூக சேவையாளர்களுக்கும்,

ஒரு அச்சுறுத்தல் விடுக்கின்ற நடவடிக்கையா என்கின்ற சந்தேகத்தை இவை எழுப்பி நிற்கின்றது.

இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஊடாக இலங்கை பாதுகாப்பு நாடாக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக விடயம் இருந்த வட்டாரங்கள் காவலையை வெளியிட்டு இருக்கின்றன.